ஜி ஸ்கொயரின் கனவினை தகர்த்த தனி மனிதன்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தெற்கு தேவி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுமார் 17 ஏக்கர் நஞ்சை நிலத்தை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் விலைக்கு வாங்கி அங்கு வில்லா அமைக்க திட்டமிட்டு இருந்தது அதை எதிர்த்து பல ஆண்டுகளாக அந்த தோப்பில் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் பாஜக பிரமுகர் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற முயற்சி செய்து கொண்டிருந்தார் இந்த நிலையில் இந்த செய்தியை முதன் முதலாக நமது நியூ திருச்சி டைம்ஸ் தான் செய்தியாக வெளியிட்டிருந்தது அதன் தொடர்ச்சியாக இன்று நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்ற கோவிந்தன் ஜி ஸ்கொயர் இன் ஸ்ரீரங்கத்தின் கனவினை தற்காலிகமாக தடுத்திருக்கின்றார் இது சாமானியனுக்கு கிடைத்த நீதி என்றும் என்றென்றும் நீதிமன்றமும் நீதி அரசர்களும் உண்மையின் பக்கம் தான் இருப்பார்கள் என்பது ஊர்ஜினமாக ஆகி உள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் மற்ற ஊடகங்கள் எல்லாம் இதை செய்தியாக முன் வராத சூழலில் நமது நியூ திருச்சி டைம்ஸ் உறுதியோடும் ஊடக தர்மத்தின் படியும் செய்தி வெளியிட்டு உண்மை தன்மையை உலகறிய செய்ததற்கு அவர் நமக்கு நன்றி கூறினார்

G Squareக்கு எதிர்ப்பு
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *