“காவிரியின் கண்ணீர்… காணாமல் போகும் வாய்க்கால்கள்!” 15 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு எப்போது? — நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர்

ஆற்று பாதுகாப்பு கோட்டம், ஆற்றை பாதுகாப்பதில்லை.
களவு போகும் கரைகள்,துணை போகும் முக்கொம்பு ஆற்று பாதுகாப்பு பிரிவு.
ஒத்துழைப்பு வழங்காத ஸ்ரீரங்கம் தாசில்தார்.

“காவிரியின் கண்ணீர்… காணாமல் போகும் வாய்க்கால்கள்!”
15 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு எப்போது? — நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர்

“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மறந்துவிட்டோமா?
விவசாயத்தின் உயிர்நாடியாக விளங்கும் காவிரி ஆறும், அதன் கிளை வாய்க்கால்களும் இன்று ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் பெட்டவாய்த்தலை முதல் திருச்சி குடமுருட்டி வரை ஓடிய பல பாசன வாய்க்கால்கள் கிராம வரைபடங்களில் மட்டும் இருப்பதாகவும், நிலத்தில் அவற்றின் தடமே காணாமல் போயுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புது ஐயன் வாய்க்கால், ராம வாத்தலை வாய்க்கால், பழையூர் வடிகால்/கொடிங்கால் வாய்க்கால், நீச்சல் குழி வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருவதாகவும், ஒருகாலத்தில் 200 அடி அகலம் கொண்ட வாய்க்கால்கள் பல இடங்களில் 8 அடியாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“ஆறு பாதுகாப்பு கோட்டமே… ஆற்றை பாதுகாக்குமா?”
முக்கொம்பு ஆற்று பாதுகாப்பு பிரிவு அலுவலகத்திற்கு அருகிலேயே காவிரி ஆற்றின் கரைகள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகள் குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

15 ஆண்டுகளாக:
கோரிக்கை மனுக்கள்
அமைதிப் போராட்டங்கள்
அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள்
என பல முயற்சிகள் மேற்கொண்டும் தீர்வு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

“அதிகாரிகளின் அலட்சியமா? விவசாயிகளின் அழிவா?”
சமூக ஆர்வலர் விருமாண்டி (எ) K.ராஜ்குமார், தலைவர் & நிறுவனர், மக்கள்நல ஆலோசனை மையம், பெட்டவாய்த்தலை, திருச்சி அவர்கள், வாய்க்கால்களை கிராம வரைபடத்தின் படி மீட்டெடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கரைகளை அமைக்கவும், கரை வழிச்சாலைகள் அமைக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடியுள்ளார்.

வழக்கு விவரம்:
Madurai Bench of Madras High Court
வழக்கு வகை: WP(MD)
Filing Number: 51696/2026
Filing Date: 24062026
Registration Number: 18308/2026
Registration Date: 25062026
CNR Number: HCMD010856112026

“கரைகள் இல்லையென்றால் அது சாக்கடை; கரைகள் இருந்தால் அது வாய்க்கால், விவசாயத்தின் பாதுகாப்பு!”
வாய்க்கால்கள் என்பது வெறும் நீர் செல்லும் பாதை அல்ல. அவை பூமியின் ரத்த நாளங்கள்.

வாய்க்கால்கள்:
நிலத்தடி நீரை உயர்த்துகின்றன,
மழைநீரை ஒழுங்குபடுத்துகின்றன,
விவசாய நிலங்களுக்கு உயிர் கொடுக்கின்றன,
விவசாய இடுபொருட்களை எளிதாக கொண்டு செல்ல உதவுகின்றன.

ஆனால் தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் இருப்பதால் பல விவசாய நிலங்கள் இன்று தரிசாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

“காவிரியை காப்பார்களா? விவசாயியை காப்பார்களா?”
திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரமேஷ் அவர்களின் சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் இருக்கும் இந்த நீர்வழிகளை, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகாவது மீட்டெடுப்பாரா?

காவிரி ஆற்றின் கரைகள் மீண்டும் உருவாக்கப்படுமா?
அனைத்து வாய்க்கால்களும் கிராம வரைபடப்படி அளவிடப்படுமா?
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுமா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

திருக்குறள்:
“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு”
— திருவள்ளுவர்.

நீர் வழிகளை பாதுகாப்பது ஒரு துறையின் கடமை மட்டும் அல்ல… அது ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பு.

காவிரி காப்போம்… வாய்க்கால்கள் மீட்போம்… விவசாயத்தை காப்போம்!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கப் பிரிவான மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (MLF) சார்பில், தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்கள் 5,493 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிடவும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திடவும் வேண்டும்

    மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கப் பிரிவான மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (MLF) சார்பில், தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்கள் 5,493 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிடவும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திடவும் வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி,…

    குடிகள் மாநாட்டில் VAOக்குகழிப்பிட வசதி செய்து தர கோரிக்கை. அறநிலையத்துறை அமைச்சரின் தொகுதியில் பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு கழிப்பிட வசதி இல்லை.

    குடிகள் மாநாட்டில் VAOக்குகழிப்பிட வசதி செய்து தர கோரிக்கை.அறநிலையத்துறை அமைச்சரின் தொகுதியில் பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு கழிப்பிட வசதி இல்லை. வெளியே சொன்ன வெட்கக்கேடு சொந்த கட்டிடம் கூட கிடையாது.தற்காலிக கழிப்பிட வசதியுடன் வீடு வாடகைக்கு பிடித்து தர கோரிக்கை.…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *