இந்து தமிழ் நாளிதழ் திருச்சி தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் உயிரிழந்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலை அண்ணா நகர் முல்லை தெருவைச் சேர்ந்த சதாசிவம்- ஜெயலட்சுமி தம்பதியரின் 2-வது மகன் கல்யாணம் (எ)
எஸ்.கல்யாண
சுந்தரம்( 50).
இவர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் செய்தியாளராக பணிபுரிந்து, பின்னர் திருச்சி மாவட்டத்தில் தினமணி மற்றும் இந்து தமிழ் திசை நாளிதழ்களில் தலைமை நிருபராக பணிபுரிந்தார்.
பத்திரிகை துறையில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர். தனது பணி காலத்தில் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான முக்கிய செய்திகளை வெளியிட்டு விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்தவர்.
தற்போது இந்து தமிழ் திசை திருச்சி பதிப்பில் தலைமை நிருபராக பணியாற்றி வந்த நிலையில், சனிக்கிழமை(09-11-2024) இரவு 10:30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலை அண்ணா நகர் முல்லை தெருவில் உள்ள அவர்களது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை திங்கள் கிழமை (11-11-2024) காலை காலை 10 மணிக்கு மேல் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

அன்னாரை இழந்து வாடும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் நியூ திருச்சி டைம்ஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

இறைவன்உறவுகளுக்கு மன வலிமையை தர இறைவனை ப்ரார்த்திக்கின்றோம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *