திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு புது திட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு புது திட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புது திட்டம் ஒன்று மேயர் அன்பழகன் கூறி உள்ளார்

திருச்சி நகராட்சியாக இருந்த போது 1966-ம் ஆண்டு பணிகள் அனைத்தும் தொடங்கி அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் சார்பில் 1972-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பேருந்து நிலையமானது திறக்கப்பட்டது. 2006 -ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையம் முழுவதுமாக பஞ்சப்பூர் மாற்றப்பட்ட பிறகு மாநகர பஸ்கள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இதுமட்டுமல்லாமல் 6 ஏக்கருக்கு மேல் இருக்கும் இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டக்கூடிய வகையில் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
52 ஆண்டுகளாக இருந்த பேருந்து நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மேயர் அன்பழகன் கூறியதாவது:-
இருக்கின்ற பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் மால்கள், அலுவலக கட்டிடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவற்றில் எதாவது அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சியில் பொழுதுபோக்குவதற்காக எந்த ஒரு இடங்களும் மிகப்பெரியதாக இல்லை. இவ்வாறு இருக்க கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் அமைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *