திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு புது திட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு புது திட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புது திட்டம் ஒன்று மேயர் அன்பழகன் கூறி உள்ளார்

திருச்சி நகராட்சியாக இருந்த போது 1966-ம் ஆண்டு பணிகள் அனைத்தும் தொடங்கி அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் சார்பில் 1972-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பேருந்து நிலையமானது திறக்கப்பட்டது. 2006 -ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையம் முழுவதுமாக பஞ்சப்பூர் மாற்றப்பட்ட பிறகு மாநகர பஸ்கள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இதுமட்டுமல்லாமல் 6 ஏக்கருக்கு மேல் இருக்கும் இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டக்கூடிய வகையில் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
52 ஆண்டுகளாக இருந்த பேருந்து நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மேயர் அன்பழகன் கூறியதாவது:-
இருக்கின்ற பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் மால்கள், அலுவலக கட்டிடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவற்றில் எதாவது அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சியில் பொழுதுபோக்குவதற்காக எந்த ஒரு இடங்களும் மிகப்பெரியதாக இல்லை. இவ்வாறு இருக்க கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் அமைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

    வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *