பாதயாத்திரையாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தங்கி செல்ல திருச்சி ஐயப்பன் கோவிலில் ஏற்பாடு

சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது.

ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இந்தியா முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

மேலும் மலையாள மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் கோயில் நடை திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்ல ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வாகனங்களில் சென்றாலும் சிலர் பாத யாத்திரையாக இருமுடி கட்டி செல்வது உண்டு அவ்வாறு செல்லும் பக்தர்கள் திருச்சி ஐயப்பன் கோயிலில் தங்கி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இதற்கு நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் என்னவென்றால்

இங்கு தங்கும் பாதயாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக 1.இருமுடி தரித்திருக்க வேண்டும்
2. எட்டு முப்பது மணிக்கு முன்பாக அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்
3. புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது .
எனவே பாதயாத்திரை ஆக செல்லும் ஐயப்ப பக்தர்கள் திருச்சி ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தங்கும் வசதியினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *