திருச்சியில் மதுபான விடுதிகளுக்கு எதிராக அமமுக உண்ணாவிரதம்

பொதுமக்களின் எதிர்ப்பைமீறி கோவில், மருத்துவமனை, குடியிருப்புகள் அதிகம் நிறைந்த திருச்சி வயலூர்சாலை மற்றும் உறையூர் லிங்கநகர் பகுதியில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் புதிதாக டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர திமுக அரசு, காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும்நிலையில் இன்றைய தினம் உயர்நீதிமன்ற அனுமதி பெற்று திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்டசெயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக ஆட்சியில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அருகிலும் 24 மணி நேரமும் வெட்ட. வெளிச்சமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும்,

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் பொதுமக்கள் குடிக்காமல் இருக்கக்கூடாது என்ற நோக்கில் சாராயமாடல் என்ற பெயரில் இந்த அரசு செயல்படுவதாகவும், இதனை தட்டி கேட்க ஆள் இல்லாத காரணத்தினால் இது எல்லை மீறி தற்போது மனமகிழ்மன்றம் என்ற பெயரில் 24 மணிநேரமும் மதுபானகடைகள் இயங்கிவருவதாகவும் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் குற்றம்சாட்டினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *