மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய அமைச்சர்

கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் 40 வருடமாக குடி இருந்த ஓட்டு வீடானது இடிந்து விழுந்தது இதை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கினார் 

திருச்சி: டிச5
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 45 வது வார்டுக்கு உட்பட்ட
மேலகல்கண்டார்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா (75 )இவரது மகன் கணேசன் (55) இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்
 இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் சுமார் 40 வருடங்களுக்கு மேல் மண் சுவரினால் கட்டப்பட்ட அவர்கள் தங்கி இருந்த ஓட்டு வீடானது இடிந்து விழுந்தது. 

 இத்தகவலை அறிந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிகளுக்கு அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் இடிந்த வீட்டை பார்வையிட்டு நிவாரணத்தொகை வழங்கி அதிகாரிகளிடம் உடனடியாக அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான தேவையான பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார் மேலும் இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் மண்டலகுழு தலைவர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர் சீதாலட்சுமி வட்டக் கழகச் செயலாளர் தமிழ்மணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *