மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய அமைச்சர்

கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் 40 வருடமாக குடி இருந்த ஓட்டு வீடானது இடிந்து விழுந்தது இதை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கினார் 

திருச்சி: டிச5
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 45 வது வார்டுக்கு உட்பட்ட
மேலகல்கண்டார்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா (75 )இவரது மகன் கணேசன் (55) இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்
 இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் சுமார் 40 வருடங்களுக்கு மேல் மண் சுவரினால் கட்டப்பட்ட அவர்கள் தங்கி இருந்த ஓட்டு வீடானது இடிந்து விழுந்தது. 

 இத்தகவலை அறிந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிகளுக்கு அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் இடிந்த வீட்டை பார்வையிட்டு நிவாரணத்தொகை வழங்கி அதிகாரிகளிடம் உடனடியாக அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான தேவையான பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார் மேலும் இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் மண்டலகுழு தலைவர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர் சீதாலட்சுமி வட்டக் கழகச் செயலாளர் தமிழ்மணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

    வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *