திருவானைக்கா ஸ்ரீ மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

திருவானைக்காவல் சன்னதி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் முன்னதாக கடந்த 3ஆம் தேதி காலை 10 மணிக்கு காவிரி நதியிலிருந்து மேளதாளம் முழங்க புனித நீர் கொண்டுவரப்பட்டது அதனைத் தொடர்ந்து கணபதி பூஜை உடன் யாகசாலை பூஜையின் முதல் கால பூஜை நடைபெற்றது இரண்டாம் நாளான நான்காம் தேதி காலை இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்று முடிந்தது அதனைத் தொடர்ந்து இன்று காலை ஏழு முப்பது மணிக்கு தொடங்கி 10:30 மணி வரை நான்காம் கால யாக பூஜை நடந்தது பின்னர் யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியத்துடன் கடங்கல் புறப்பட்டு கோயில் கும்பத்திற்கு கொண்டுவரப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2006க்கு பிறகு 19 வருடங்களுக்குப் பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த கோயிலில் சிற்பங்கள் கிடையாது சித்திர வடிவத்தில் காளியம்மன் ஓவியமாக வரையப்பட்டு இருக்கும் இத்திரு கோயில் திருவானைக்கா கோயிலுக்கு வாசலில் அமைந்துள்ளது மேலும் இது இக்கோயிலின் எல்லை காவல் தெய்வமான பிடாரி இரணியம்மன் கோவிலின் பதிவு கோயிலாகவும் விளங்கி வருகிறது இந்த ஊர் மக்கள் இக்கோயிலை தங்களை காக்கும் கடவுளாக பாவித்து வருகின்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *