திருவானைக்கா ஸ்ரீ மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

திருவானைக்காவல் சன்னதி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் முன்னதாக கடந்த 3ஆம் தேதி காலை 10 மணிக்கு காவிரி நதியிலிருந்து மேளதாளம் முழங்க புனித நீர் கொண்டுவரப்பட்டது அதனைத் தொடர்ந்து கணபதி பூஜை உடன் யாகசாலை பூஜையின் முதல் கால பூஜை நடைபெற்றது இரண்டாம் நாளான நான்காம் தேதி காலை இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்று முடிந்தது அதனைத் தொடர்ந்து இன்று காலை ஏழு முப்பது மணிக்கு தொடங்கி 10:30 மணி வரை நான்காம் கால யாக பூஜை நடந்தது பின்னர் யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியத்துடன் கடங்கல் புறப்பட்டு கோயில் கும்பத்திற்கு கொண்டுவரப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2006க்கு பிறகு 19 வருடங்களுக்குப் பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த கோயிலில் சிற்பங்கள் கிடையாது சித்திர வடிவத்தில் காளியம்மன் ஓவியமாக வரையப்பட்டு இருக்கும் இத்திரு கோயில் திருவானைக்கா கோயிலுக்கு வாசலில் அமைந்துள்ளது மேலும் இது இக்கோயிலின் எல்லை காவல் தெய்வமான பிடாரி இரணியம்மன் கோவிலின் பதிவு கோயிலாகவும் விளங்கி வருகிறது இந்த ஊர் மக்கள் இக்கோயிலை தங்களை காக்கும் கடவுளாக பாவித்து வருகின்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *