கஞ்சா கடத்திய போலி தம்பதி-கைது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டுபேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசார் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் திருச்சி நோக்கி வந்த காரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் காரில் வந்த இரண்டு பேர் தாங்கள் கணவன் மனைவி என்று கூறி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவரிடமும் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.அதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், கடம்பூரை சேர்ந்த கருப்பையா மகன் சரவணன் (45), மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த ரெங்கநாதன் மனைவி மஞ்சுளா என்கிற மணிமேகலை (30) என்பதும், இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது தெரியவந்தது.மேலும் இரண்டு பேரும் திட்டமிட்டு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பூர்ணராவ் என்பவரிடம் 22 கிலோ கஞ்சாவை வாங்கி கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்தனர்…!!!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *