தாராபுரத்தில் கார்த்திகை மாதம் சோமவாரம் முன்னிட்டு சொக்கநாதர் திருக்கோயில் சங்க அபிஷேகம் நடைபெற்றது..

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம், டிச 09-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபுரம் பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதர் மீனாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலில் இன்று கார்த்திகை 4 வது வாரம் திங்கள்கிழமை சோமவாரத்தை முன்னிட்டு சொக்கநாதருக்கு பெருமானுக்கு 16 வகையான திரவியங்கள் பயன்படுத்தி அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கோயில் வளாகத்தில் ஹோமம் வளர்த்து,108 சங்கி”ல் மஞ்சள் குங்குமம் விபூதி சந்தனம் இளநீர் பால் பஞ்சாமிர்தம் பன்னீர் திரவிய பொடி போன்றவை நிரப்பி சொக்கநாதருக்கு
அபிஷேகம் செய்தனர், பின்னர் அலங்கரித்த சொக்கநாதர் கடவுளை பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதில் ஏராளமான சிவ பக்தர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் அருள் பெற்று சென்றனர். அதன் பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டன..

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    புனித ரமலான் நோன்பு துவக்கம்

    இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது எதனால் ? “நோன்பு என்பது ஒரு கேடயம்; அது மனிதனைத் தீமைகளிலிருந்து காக்கிறது.” என்பது நபிகளாரின் பொன்மொழி. இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதற்கான காரணங்கள் மிகவும் ஆழமானவை. இது வெறும் பசியோடு இருப்பது மட்டுமல்ல, உடல் மற்றும் உள்ளத்தைத்…

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *