முதல்வரின் 50 சதவீத பணியை தனது தோளில் சுமந்து கொண்டு பணியாற்றுபவர் தான் இன்று பிறந்தநாள் விழா காணும் துணை முதல்வர் என்று எடுத்துரைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருச்சி டிச19

         திராவிட மாடல் ஆட்சி நடத்தக்கூடிய முதல்வர் அவர்களின்  கரத்தை மக்களாகிய நீங்கள் வலுப்படுத்த வேண்டும்  உங்களுடைய ஆதரவின் மூலம் அவர் உங்களுக்காக கொண்டுவரும் திட்டம் முழுமையாக உங்களை வந்துசேர்கிறது இதனால் முழு நம்பிக்கையும் பெற்று நிம்மதியாக வாழ்கிறீர்கள்

இதற்கு ஒரே காரணம் யார் என்றால் அது தமிழக முதல்வர் தான் என்றும்
மேலும் எதிர் கட்சியை சார்ந்தவர்கள் பேசும்போது எல்லாம் நாங்கள் இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்டுள்ள இயக்கம் என்று கூறுகிறார்கள் அது அவர்கள் இயக்கம் கூறுவதில் தவறு ஏதுமில்லை ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் ஒட்டுமொத்தமாக வாங்கிய வாக்குகள் 89 லட்சம் வாக்குகள் மட்டும்தான்
அப்படியானால் ஒரு கோடி 60 லட்சம் பேர் எங்கு சென்றார்கள் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி உள்ளனர் என்றும்
மேலும் 2021ல் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் கூறும் பொழுது நமக்கும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கும் பெரியதாக வாக்கு வித்தியாசம் இல்லை என்றும் வெறும் ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் தான் என்றும் கூறுகின்றனர்.

        ஆனால் உண்மை நிலை என்னவென்றால் திமுக கூட்டணி பெற்றது ஒரு கோடியே 74 லட்சம் வாக்குகள் ஆனால் எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 53 லட்சம் வாக்குகள் ஏறக்குறைய 20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்றும் இந்த முறை 34 இடங்களில் நின்று வெறும் 21 சதவீத வாக்குகள் தான் பெற்றிருக்கிறார்கள் என்றும் அவர்கள் வளர்கிறார்களோ தேய்கிறார்களோ என்பதை நமக்கு தேவையில்லை ஆனால் ஒட்டுமொத்தமாக அவர்களுடைய வாக்குகளும் திமுகவிற்கு தான் வாக்களிக்கப்பட்டதாகவும் எடுத்துரைத்தார் மேலும் தமிழக முதல்வரின் அன்றாட பணியில் 50% பணியை தனது தொழில் சுமந்து கொண்டு பணியாற்றுபவர் தான் இன்று பிறந்தநாள் விழாகானும்  துணை முதல்வர் என்றும் எடுத்துரைத்தார் மேலும் சிறுபான்மையினருக்காக தோளோடு தோல் நின்று உழைக்கக்கூடிய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக உழைக்கக் கூடியவர் தான் மாண்புமிகு முதல்வர் என்றும் எடுத்துரைத்தார்.
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *