மயிலிறகு கொண்டு கண்டன கணை தொடுத்த எம்.பி

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கிறது. கல்வி பயிலும் இடஙகளே மாணவிகளுக்கு பாதுகாப்பாக இல்லாத சூழல் நிச்சயம் அச்சுறுத்தக் கூடியது.

அதுவும் குற்றவாளி குற்றம் செயவதை வழக்கமாக கொண்டிருப்பவர் என்பதையும், அவர் மீது இதுவரை ஏழு குற்றப் பத்திரிக்கைகள் நிலுவையில் உள்ளன என்பதையும் நாம் எளிதாக கடந்து போய் விட முடியாது.

மாணவியை அவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதோடு,அவரை வீடியோ எடுத்து அவரை வேறு ஒரு நபரிடம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியாக வரும் செய்திகள் மிகுந்த கவலையும்,துயரமும் அளிக்கிறது. இது போன்ற கொடுமைகளுக்கு பல பெண்கள் தொடர்ந்து உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொருமுறையும் இப்படியொரு பாலியல் வன்கொடுமை நடக்கின்ற போது பொங்கி எழுவதும்,பிறகு அதை கடந்து போய்விடுவதுமான சூழலால் ஒருபோதும் பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முடியாது.

இம்மாதிரியான பாலியல் வன்கொடுமை நிகழும்போது ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதுவினையாற்றுவதோடு மட்டுமல்லாமல் குடும்பம்,பணியிடம்,பொதுவெளி என்று அனைத்து இடங்களையும்,பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற தொடர்ந்து பணியாற்ற வேண்டும். தொடர்ந்து பெண்கள் தொடர்பான சமூகப் பார்வையை,உரையாடலை மாற்றியமைப்பதோடு,பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் பாதுகாப்பாக உணர முடியும்.

செ.ஜோதிமணி எம்.பி

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *