மயிலிறகு கொண்டு கண்டன கணை தொடுத்த எம்.பி

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கிறது. கல்வி பயிலும் இடஙகளே மாணவிகளுக்கு பாதுகாப்பாக இல்லாத சூழல் நிச்சயம் அச்சுறுத்தக் கூடியது.

அதுவும் குற்றவாளி குற்றம் செயவதை வழக்கமாக கொண்டிருப்பவர் என்பதையும், அவர் மீது இதுவரை ஏழு குற்றப் பத்திரிக்கைகள் நிலுவையில் உள்ளன என்பதையும் நாம் எளிதாக கடந்து போய் விட முடியாது.

மாணவியை அவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதோடு,அவரை வீடியோ எடுத்து அவரை வேறு ஒரு நபரிடம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியாக வரும் செய்திகள் மிகுந்த கவலையும்,துயரமும் அளிக்கிறது. இது போன்ற கொடுமைகளுக்கு பல பெண்கள் தொடர்ந்து உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொருமுறையும் இப்படியொரு பாலியல் வன்கொடுமை நடக்கின்ற போது பொங்கி எழுவதும்,பிறகு அதை கடந்து போய்விடுவதுமான சூழலால் ஒருபோதும் பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முடியாது.

இம்மாதிரியான பாலியல் வன்கொடுமை நிகழும்போது ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதுவினையாற்றுவதோடு மட்டுமல்லாமல் குடும்பம்,பணியிடம்,பொதுவெளி என்று அனைத்து இடங்களையும்,பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற தொடர்ந்து பணியாற்ற வேண்டும். தொடர்ந்து பெண்கள் தொடர்பான சமூகப் பார்வையை,உரையாடலை மாற்றியமைப்பதோடு,பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் பாதுகாப்பாக உணர முடியும்.

செ.ஜோதிமணி எம்.பி

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *