வின்னதிர ஒலித்த ரங்கா ரங்கா கோஷம் – பரம்பத வாசலை பக்தர்களுடன் கடந்த ஸ்ரீரங்கநாதர்

108 வைணவ தலங்களில் முதன்மையானது  திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் . இக்கோயிலில்  வருடம் தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா  தமிழகம் மட்டும் இல்லாமல்  இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டு வருவார்கள்.

இவ்வாறு சிறப்புமிக்க  ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கில் பக்தர்கள் திரளாக திரண்டிருந்து  ஸ்ரீ ரங்கநாதரை  தரிசித்து வருகின்றனர்.


வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் முழுவதுமே பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

ஸ்ரீரங்கநாதரின் அருளாசி பெற வந்திருக்கும் பக்தர்களால், ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி வரையில் முழுக்கவே திருவிழா கோலமாக தான் இருக்கிறது.

திருச்சி பூலோக வைகுண்டம் என பேறு பெற்ற ஸ்ரீரங்கத்தில் தினமும் திருவிழா தான். அந்த வகையில் இன்று சொர்க்க வாசல் திறப்பையொட்டி களைக்கட்டி இருக்கிறது.


விஜயநகர பேரரசர் ஆட்சி செய்த காலத்தில் தை பிரம்மோற்ஸவ காலத்தில் மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும் தை முதல் பகுதியில் பிரம்மோற்சவமும் எப்படி கொண்டாடுவது என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி 19 வருடங்களுக்கு ஒருமுறை இந்த மாதிரி வைகுண்ட ஏகாதசி திருவிழாவை கார்த்திகையில் மாற்றியமைத்து வழி ஏற்படுத்தி கொடுத்தார்.


இன்று ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

திருச்சி ஸ்ரீரங்கத்தில் 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் இன்று ஜனவரி 10ம்தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி மற்றும் வெளியூரை சேர்ந்த 2,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் உள்ளூர் மக்களும் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் கலந்து கொள்ள வசதியாகவும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் திருச்சி மாவட்டத்திற்கு இன்று ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *