சேதமடைந்த சாலைகள் சீர் செய்யப்படுவது எப்போது – விடியல் தேடும் பொதுமக்கள்

பதிவு நாள் : 27.10.2024
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் பேட்டவாய்த்தலை ஊராட்சியில், பழங்காவேரி முதல் காமநாயக்கன்பாளையம் வரை செல்லும் சேதமடைந்த சாலையானது
கடந்த சில நாட்களுக்கு புதுப்பிக்கப்படும் பொருட்டு பழைய சாலை பெயர்க்கப்பட்டது.
சாலை பணிகள் ஆரம்பிக்கும் போதே எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. பணியின் தூரம் உள்ளிட்ட விபரப்பலகை பற்றி கேட்டதற்கு சரியான தகவல் இல்லை.
எத்தனை நாட்களில் சாலை போடப்படும் தீபாவளி நேரத்தில் சாலை பறித்துப்போட்டால் மக்கள் பாதிப்படைவார்கள் என எடுத்துரைத்த போது ஒரே வாரத்தில் சாலை புதுப்பிக்கப்பட்டுவிடும் என உத்தரவாதம் ஊராட்சி நிர்வாகத்தால் அளிக்கப்பட்டது.
ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் தற்போது வரை சாலைப்பணிகள் முடியாததால் சுமார் இரண்டு கி.மீ வரை தொலைவுள்ள இச்சாலையில் வசிக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இச்சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராமநிர்வாக அலுவலகம், கால்நடை மருந்தகம், உயர்நிலைப்பள்ளி, பால்வாடிகள், என மக்கள் பயன்பாடு அதிகம் உள்ள சாலை
தீபாவளி நேரத்தில் இப்படி பறித்து போடப்பட்டு இருப்பது குறித்து ஊராட்சி நிர்வாகம் வசமும், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வசமும் முறையிட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் இருப்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
இச்சாலையில் இருக்கும் சரளை கற்கள் சருக்கி விடுவதால் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம்.
உயிருக்கு ஆபத்தோ அல்லது கை, கால் முடமோ ஆகும் அவல நிலை.
விரைவில் சம்மந்தப்பட்ட துறையினர் ஓரிரு நாட்களில் சாலைப்பணியினை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சாலைப்பயனீட்டாளர் நல அமைப்பு மற்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *