மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள்- திருச்சி மாநகர் மாவட்ட அமமுக வினர் அஞ்சலி

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் நாகூர் மீரான், முருகானந்தம், வழக்கறிஞர் அணி செயலாளர்கள் பிரகாஷ், பாலாஜி ஆகியோரின் தலைமையில்,

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வீரவணக்க நாள் அமைதிப் பேரணி,

திருச்சி கோர்ட் அருகே உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலையில் தொடங்கி, மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் திரு சின்னசாமி, திரு விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று, மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கழக தலைமை நிலை செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான M.ராஜசேகரன் Ex. MLA ,

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப_செந்தில்நாதன்

கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர், மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் கமுருதீன்,

மாவட்ட அவை தலைவர் திரு MS ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

மாவட்ட நிர்வாகிகள்,மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி செயலாளர்கள்,ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்,ஊராட்சி, கிளை,வட்ட செயலாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள்,மகளிர் அணி நிர்வாகிகள், நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *