திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில் சின்ன சௌராஷ்ட்ரா தெருவில் உள்ள சிந்தி சேட்டு கோவிலில் சங்க தலைவர் திரு. J. J. மகேஷ் அவர்கள் தலைமையில் சங்க செயலாளர் C. R. அம்சராம் வரவேற்புரை ஆற்ற சங்க துணைத்தலைவர்கள், S. D. முரளிதரன், B. S. ராமபிரசாத், S. S. வினோத், துணைச்செயலாளர்கள் P. J. வெங்கடேசன், K. ராமன் முன்னிலை வகிக்க. சிறப்பு விருந்தினராக சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு. A. S. சுதர்சன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி பரிசுகள் வழங்கினார் . மேலும் இவவிழாவில் சமூக பெரியோர்கள் திரு. K. V. வராதச்சாரி,திரு K. K. கோவிந்தன், திரு. C. R. உமாபதி, திரு N. R. சஹஸ்ரநாமன்,பேராசிரியர் V. S. ரெங்கநாதன், B. R. ஜெயகுமார், A. J.பெருமாள், M. D. ராம்குமார், திரு.VSR. கோபிநாத்,திரு B. R. ராஜன்,திரு A. D.அசோக் குமார், K. N. ராஜேந்திரன்,A. S. செந்தில், B. K. சரவணன், J. K. மதன், K. P. கண்ணன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட 179 மகளிர்களுக்கும்,63 பள்ளி மணாகர்களுக்கும் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க இயக்குனர்கள் M. K. சீனிவாசன், V.R. தினேஷ், V. G. மணிமாறன் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக சங்க பொருளாளர் S. S. ஹரிஹரன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.





