சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில் சின்ன சௌராஷ்ட்ரா தெருவில் உள்ள சிந்தி சேட்டு கோவிலில் சங்க தலைவர் திரு. J. J. மகேஷ் அவர்கள் தலைமையில் சங்க செயலாளர் C. R. அம்சராம் வரவேற்புரை ஆற்ற சங்க துணைத்தலைவர்கள், S. D. முரளிதரன், B. S. ராமபிரசாத், S. S. வினோத், துணைச்செயலாளர்கள் P. J. வெங்கடேசன், K. ராமன் முன்னிலை வகிக்க. சிறப்பு விருந்தினராக சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு. A. S. சுதர்சன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி பரிசுகள் வழங்கினார் . மேலும் இவவிழாவில் சமூக பெரியோர்கள் திரு. K. V. வராதச்சாரி,திரு K. K. கோவிந்தன், திரு. C. R. உமாபதி, திரு N. R. சஹஸ்ரநாமன்,பேராசிரியர் V. S. ரெங்கநாதன், B. R. ஜெயகுமார், A. J.பெருமாள், M. D. ராம்குமார், திரு.VSR. கோபிநாத்,திரு B. R. ராஜன்,திரு A. D.அசோக் குமார், K. N. ராஜேந்திரன்,A. S. செந்தில், B. K. சரவணன், J. K. மதன், K. P. கண்ணன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட 179 மகளிர்களுக்கும்,63 பள்ளி மணாகர்களுக்கும் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க இயக்குனர்கள் M. K. சீனிவாசன், V.R. தினேஷ், V. G. மணிமாறன் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக சங்க பொருளாளர் S. S. ஹரிஹரன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    சிவன் சொத்து குல நாசம் – ஏய்ப்பவர்கள் ஈசனின் நெற்றிக்கண் திறப்பில் சாம்பலாவது உறுதி. – மந்திரியால் என்ன செய்ய இயலும் என ஆணவமாக பேசுபவரின் அகம்பாவத்தை ஈசன் அடக்குவான்

    ராஜகோபுர ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடங்கிதிருப்பராய்த்துறை சிவன் திருக்கோயில் மேம்பாட்டிற்கு 16 அம்ச கோரிக்கை“கோயில் காக்க… கொள்கை வகுக்க… பக்தர் வாழ… பாரம்பரியம் நிலைக்க…” “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” – திருவாசகம். ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மற்றும்…

    “மக்கள் ரோட்டில் தவழ… கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளும் அரசும் அதிகாரிகளும் அரசு இயந்திரமும் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்எல்ஏ அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை எடுப்பாரா ?மாமாங்க கால பாதையை மூடியது பாதுகாப்புக்கா? மனிதநேயத்தைப் புதைப்பதற்கா?”

    திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முருங்கப்பேட்டை பகுதியில் நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை ரயில்வே நிர்வாகம் திடீரென மூடியதால், பொதுமக்கள் அவதி. மக்கள் ரோட்டில் தவழ… கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை உட்பட மற்ற அதிகாரிகள். ரயில்வேயின் அராஜக மற்றும் மனிதநேயமற்ற…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *