
மதிப்பிற்குரிய எங்கள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு வணக்கம்.
மக்களுக்காக களத்தில் நின்று பல நல்ல பணிகள் செய்து வருகிறீர்கள் தயவு செய்து இதற்கும் ஒரு தீர்வு கண்டு தாருங்கள்.

சாவதற்குள் மின்சார இணைப்பு பெற்று நிம்மதியாக சாவதற்கு 76வயதான விதவை மூதாட்டியின் கோரிக்கை
எங்களுக்கு மின்சார வசதி மட்டுமாவது தற்காலிகமாக பெற்றுத் தாருங்கள். இதற்கு மின்சார வாரிய சட்டத்தில் இடம் இருக்கிறது. மின்சாரம் என்பது அடிப்படை உரிமை என்று நமது பல நீதிமன்றங்களும் உத்தரவு போட்டுள்ளன. எங்களது மனுவை என்ஓசி கேட்டு நிராகரிப்பதிலேயே மின்சார வாரியம் குறியாக இருக்கிறது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள நந்தவனம் என்ற இடத்தில் கடந்த 16 வருடமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகிறோம்.

இது சம்பந்தமாக தங்களிடம் மனு கொடுத்தம் தாங்களும் நடவடிக்கை எடுத்தீர்கள். ஆனால் மாநில நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. தற்போது எங்களது வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து எங்களுக்கு மின்சாரம் மட்டுமாவது பெற்றுத் தாருங்கள்

செண்பகவல்லி, வயது76
நந்தவனம் திருப்பராய்த்துறை
Mobile – 75029 70096













