தூய்மைக் காவலர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நடந்துவருகிறது. இந்நிகழ்வில் 24க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், 4 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் மேற்பட்டோர்கள் பங்கேற்று உள்ளார்கள். இதற்காக 1000க்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அதிகாலை 3 மணி முதலே தங்களின் பணியைத் தொடங்குகிறார்கள். இவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தூய்மைக் காவலர்களுடன் இணைந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மதிய உணவு உட்கொண்டு நன்றிகளையும் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்கு சென்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களால் அமைக்கப்பட்டுள்ள நுழைவுவாயிலில் ஏறிய அமைச்சர் கூடாரங்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்றவர்களின் பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 600 சி.சி.டி.வி கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்கும் அறைக்கும் நேரடியாக சென்ற அமைச்சர் அவர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *