அதிநவீன கருவிகளுடன்பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம்:-

அதிநவீன கருவிகளுடன்
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மாதத்திற்கு சுமார் 650 பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது. அதில் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தை சிறப்பு சிகிச்சை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாதத்திற்கு 180 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இங்கு பிறந்த குறை மாத குழந்தைகளுக்கு (ரட்டினோபதி) Rop நோய் கண்டறியப்பட்டு லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண் பார்வை மீட்டெடுக்கப்படுகிறது,

அதிநவீன கருவிகள் மூலம் கண் பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளில் 1 கிலோ 500 கிராம் எடை குறைவாக 97 குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும் 700 கிராம் 600 கிராம் என 37 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குழந்தைகளை அதிநவீன சுவாச கருவிகள் (வென்டிலேட்டர்) மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிறந்தவுடன் மூச்சுத்திணறல், குறைமாதம், ரத்த மாற்று சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும் எடை குறைவாக பிறந்த குறை மாத குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேலூர், தருமபுரி மருத்துவக்கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகளில் அளிக்கும் சிகிச்சைகளை போன்று இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.தமிழகத்திலேயே பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் சிறந்த மருத்துவமனையாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை தமிழக அரசு பாராட்டி 2 முறை சான்றிதழ் வழங்கியுள்ளது என குறிப்பிடத்தக்கவுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *