அதிநவீன கருவிகளுடன்பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம்:-

அதிநவீன கருவிகளுடன்
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மாதத்திற்கு சுமார் 650 பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது. அதில் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தை சிறப்பு சிகிச்சை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாதத்திற்கு 180 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இங்கு பிறந்த குறை மாத குழந்தைகளுக்கு (ரட்டினோபதி) Rop நோய் கண்டறியப்பட்டு லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண் பார்வை மீட்டெடுக்கப்படுகிறது,

அதிநவீன கருவிகள் மூலம் கண் பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளில் 1 கிலோ 500 கிராம் எடை குறைவாக 97 குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும் 700 கிராம் 600 கிராம் என 37 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குழந்தைகளை அதிநவீன சுவாச கருவிகள் (வென்டிலேட்டர்) மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிறந்தவுடன் மூச்சுத்திணறல், குறைமாதம், ரத்த மாற்று சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும் எடை குறைவாக பிறந்த குறை மாத குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேலூர், தருமபுரி மருத்துவக்கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகளில் அளிக்கும் சிகிச்சைகளை போன்று இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.தமிழகத்திலேயே பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் சிறந்த மருத்துவமனையாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை தமிழக அரசு பாராட்டி 2 முறை சான்றிதழ் வழங்கியுள்ளது என குறிப்பிடத்தக்கவுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *