தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை – SDPI விமன் இந்தியா மூவ்மெண்ட் ஆர்ப்பாட்டம்.

விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டத்தின் சார்பாக தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், கடுமையான சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டம் சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி அரியமங்கலம் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் முன்பு மாவட்ட தலைவர் தெளலத் நிஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொது செயலாளர் S.ஷமீனா பர்வீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் M.மெஹராஜ் பானு அவர்கள் கலந்து கொண்டு கண்டன எழுச்சி உரையாற்றினார் .

மேலும் விம் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அ.மசூதா மரியம் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் திருச்சி மாவட்ட துணைதலைவர் தளபதி அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மாவட்ட துணை தலைவர் மூமினா பேகம் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

இந்நிகழ்வை திருவெறும்பூர் தொகுதி தலைவர் J.பாத்திமா அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இதில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள்,தொகுதி ,அணிநிர்வாகிகள்,விம் நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

இறுதியாக திருவெறும்பூர் தொகுதி செயலாளர் ரம்ஜான் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *