தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை – SDPI விமன் இந்தியா மூவ்மெண்ட் ஆர்ப்பாட்டம்.

விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டத்தின் சார்பாக தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், கடுமையான சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டம் சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி அரியமங்கலம் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் முன்பு மாவட்ட தலைவர் தெளலத் நிஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொது செயலாளர் S.ஷமீனா பர்வீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் M.மெஹராஜ் பானு அவர்கள் கலந்து கொண்டு கண்டன எழுச்சி உரையாற்றினார் .

மேலும் விம் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அ.மசூதா மரியம் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் திருச்சி மாவட்ட துணைதலைவர் தளபதி அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மாவட்ட துணை தலைவர் மூமினா பேகம் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

இந்நிகழ்வை திருவெறும்பூர் தொகுதி தலைவர் J.பாத்திமா அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இதில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள்,தொகுதி ,அணிநிர்வாகிகள்,விம் நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

இறுதியாக திருவெறும்பூர் தொகுதி செயலாளர் ரம்ஜான் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *