குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி

பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தென்னக
இரயில்வே திருச்சி மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி 26.02.2025 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சமுதாயத்தின் பங்கு மற்றும் கிராம வட்டார மாவட்ட மற்றும் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி மண்டல வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களின் செயல்பாடுகள் பணிகள் குறித்தும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளான கருக்கலைப்பு சிசுக்கொலை பாலியல் வன்முறை குழந்தை திருமணம் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தைகள் மீதான சித்திரவதைகள் குறித்தும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் இளஞ்சிறார் நீதி சட்டம் குறித்தும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு அரசு நலத்திட்டங்களான முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் தொட்டில் குழந்தை திட்டம் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மிஷன் வாத்சல்யா நிதி ஆதரவுத் திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் மூவாலூர் இராமாமிர்தம் புதுமைப்பெண் திட்டம் குறித்தும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்களான குழந்தைகள் உதவி மைய எண் 1098 பள்ளி கல்வித்துறை தொலைபேசி எண் 14417 மற்றும் பெண்கள் உதவி மைய எண் 181 செயல்பாடுகள் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில்
இரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *