குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி

பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தென்னக
இரயில்வே திருச்சி மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி 26.02.2025 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சமுதாயத்தின் பங்கு மற்றும் கிராம வட்டார மாவட்ட மற்றும் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி மண்டல வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களின் செயல்பாடுகள் பணிகள் குறித்தும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளான கருக்கலைப்பு சிசுக்கொலை பாலியல் வன்முறை குழந்தை திருமணம் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தைகள் மீதான சித்திரவதைகள் குறித்தும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் இளஞ்சிறார் நீதி சட்டம் குறித்தும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு அரசு நலத்திட்டங்களான முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் தொட்டில் குழந்தை திட்டம் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மிஷன் வாத்சல்யா நிதி ஆதரவுத் திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் மூவாலூர் இராமாமிர்தம் புதுமைப்பெண் திட்டம் குறித்தும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்களான குழந்தைகள் உதவி மைய எண் 1098 பள்ளி கல்வித்துறை தொலைபேசி எண் 14417 மற்றும் பெண்கள் உதவி மைய எண் 181 செயல்பாடுகள் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில்
இரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *