போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் மக்கள் பணி செய்வதே என் பணி என நேர்மையாக பணிபுரிந்த மாரியப்பன் அவர்களுக்கு……

மாரியப்பன்………
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் இணை ஆணையராக பதவியில் இருந்தவர். முன்பே ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலின் இணை ஆணையராக இருந்து பல்வேறு வகைகளில் மிகவும் பொறுப்போடு தன் பணிகளை திறம்பட செய்தவர் பின்பு திருஆனைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலுக்கு இணை ஆணையராக பதவி ஏற்ற பிறகு அந்த திருக்கோவிலின் வருமானத்தை பெருக்கியதோடு பல்வேறு வகைகளில் திருக்கோவிலில் சுற்றிக் கொண்டிருந்த மனிதர்களை அப்புறப்படுத்தி நிர்வாகத்தை சீராக கட்டமைத்து கோவிலை மிகவும் சிறப்பான முறையில் பராமரித்து வந்தவர். அதன் காரணமாக அங்கிருந்த ஒரு சிலரின் எதிர்ப்பிற்கு ஆளாகி பின்பு மீண்டும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலுக்கு இணை ஆணையராக பதவியில் அமர்ந்தார்.

அவர் வருவதற்கு முன்பு திருக்கோவிலில் இருந்த இடர்பாடுகளையும் சில ஏஜென்ட்களின் நடவடிக்கைகளையும் இவர் வந்த பிறகு முற்றிலுமாக தடுத்து நிறுத்தி கோவிலின் புனிதத்தை காப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டார். கோவிலின் திருவிழாக்கள் செம்மையாக நடப்பதற்கும் பக்தர்களுக்கு எந்த விதமான குறைபாடுகளும் ஏற்படாத வண்ணம் தரிசனம் செய்வதற்கு உரிய வசதிகளையும் மிகவும் சிறப்பாக செய்து கொடுத்தார். அரசியல்வாதிகளின் அழுத்தம் உள்ளூர் பிரமுகர்களின் அழுத்தம் உள்ளுக்குள்ளேயே இருக்கும் ஒரு சிலரின் அழுத்தம் என அனைத்தையும் தாங்கிக் கொண்டு அத்தனைக்கும் இடையிலும் தன்னுடைய நிர்வாகப் பணியை மிகவும் சிறப்பாக செய்து வந்தவர் இந்த மாரியப்பன்.

இவரிடம் இருக்கும் ஒரே ஒரு குறை அவ்வளவு எளிதாக இவரை நாம் சந்தித்து விட முடியாது, என்ன காரணமோ தெரியவில்லை பத்திரிகையாளர்களுக்கும் இவருக்கும் இடையில் ஒரு ஏழாம் பொருத்தமே இருந்து வந்தது. அவ்வளவு எளிதாக இவரை நாம் அணுக முடியாது , அலைபேசியில் அழைப்பு செய்தாலும் எடுத்துப் பேச மாட்டார். கிட்டத்தட்ட பத்திரிகையாளர்களை புறக்கணிப்பார் என்று தான் கூற வேண்டும். என்னதான் அவர் பத்திரிக்கையாளர்களை புறக்கணிப்பு செய்தாலும் கோவில் நிர்வாக விஷயத்தில் அவரின் பணி என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இன்று அவர் மாற்றலாகி மதுரைக்கு செல்கின்றார், இந்த நேரத்தில் எந்த அரசு அதிகாரிகளிடமும் எந்த அரசியல்வாதிகளிடமும் எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சாமானிய மக்களின் மனசாட்சியாக செயல்படும் நியூ திருச்சி டைம்ஸ் இந்த சாமானிய இணை ஆணையர் அவர்களை அன்போடு மரியாதையோடும் வாழ்த்தி வழி அனுப்புகின்றது.

மாரியப்பன் போன்ற நேர்மையான அதிகாரிகள் எந்த இடத்தில் இருந்தாலும் எதற்கும் கலங்காமல் தன்னுடைய பணிகளை திறம்பட செய்வார்கள் என்பதற்கு இந்த மாரியப்பன் ஒரு நல்ல உதாரணம்.

சென்று வாருங்கள் மாரியப்பன் சார். விரைவில் மீண்டும் ஸ்ரீரங்கத்தில் உங்களை அரங்கநாதர் தன்னருகில் அழைத்து அமர வைத்து தன் கோவில் நிர்வாகப் பணிகளை கவனிக்க வைப்பார் என்று திடமாக நம்புகின்றோம்.

வாழ்த்துகள் மாரியப்பன்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *