பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான நான்காம் கட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான நான்காம் கட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி திருச்சி காவல்துறை பணியிடை பயிற்சி மையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் தலைமையில் 22.03.25 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு இளஞ்சிறார் நீதி சட்டம் 2015 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ஆகிய சட்டங்களின் முக்கிய பிரிவுகள் குழந்தை நலக்குழு இளஞ்சிறார் நீதிக் குழுமம் மற்றும் குழந்தைகள் உதவி மையம் செயல்பாடுகள் பணிகள் நடைமுறைகள் குறித்தும் ஆண்டிற்கு ஆறு முறை நடக்கும் கிராம சபைக் கூட்டங்களான


ஜனவரி 26 மார்ச் 22 மே 01 ஆகஸ்ட் 15 அக்டோபர் 02 நவம்பர் 01 ஆகிய நாட்களிலும் கிராம வட்டார மாவட்ட பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி மண்டல வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்கள் காலாண்டிற்கு ஒரு முறையும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மாதம் தோறும் நடக்கும் நாளில் காவலர்களின் பங்கேற்பு குறித்தும் குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் விவரம் இலவச தொலைபேசி எண்களான குழந்தை உதவி மையம் 1098
பெண்கள் உதவிமையம் 181

மூத்தகுடி மக்கள் உதவிமையம் 14567 பள்ளி மாணவர்களுக்கான உதவி மையம் 14417 இணைய வழி குற்றம் 1930 போதை சிகிச்சை மீட்பு மறுவாழ்வு மற்றும் மனநலம் சார்ந்து 14416 குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் 95 க்கும் மேற்பட்ட திருச்சி மற்றும் மாநகரம், கரூர் பெரம்பலூர் புதுக்கோட்டை அரியலூர் மற்றும் இரயில்வே காவல் ஆளிநர்கள் கலந்துக் கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *