திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஜெ. செந்தில்நாதன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் எம்ராஜேந்திரகுமார் மூத்த வழக்கறிஞர் ராஜேந்திரன் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி நீதிமன்றம் எதிரே கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாநில செயலாளர் கிருபா மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வனஜா மோகனா விக்னேஷ் சுகன்யா சிவகாமி பெரியசாமி முருகையா நோபல் சந்திரபோஸ் அப்துல் சலாம் சுரேஷ் ஆறுமுகம் அஸ்வின் பிரபு கோகுல் காமராஜ் பழனிச்சாமி ரமணன் அமர்த்தியா சுப்ரமணி சரவணகுமார் பிரியா அசோக்குமார் டேனியல் கார்த்திகா ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. கூட்டணி ஆட்சி தத்துவப்படி தமிழகத்தில் நிறைவடையா இருக்கும் மாநில அரசு சார்ந்த அரசு வழக்கறிஞர் பதவிக்கு காங்கிரஸ் வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை வழங்ககோரி தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைப்பது.
  2. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் பொருளாதார குற்றப்பிரிவு, கடனுறுதி தீர்ப்பாயம், போஸ்கோ நீதிமன்றம் ஃ(குழந்தைகளைபாதுகாக்கும் நீதிமன்றம்) போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் நீதிமன்றம்(EOW,DRT, POCSO,NDPS) ஆகிய நீதிமன்றங்களை கொண்டுவர தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
  3. திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் கேரள மாநிலம் வயநாடு சென்று தேர்தலில் போட்டியிடும் இளம் தலைவி ப பிரியங்கா காந்தி வெற்றிக்கு பாடுபடுவது.
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

    வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *