மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர களின் சமத்துவ நடைபயண நிறைவு விழா – தொண்டர்களை அழைக்கிறார் துரை வைகோ எம்.பி.

அழைப்பு மடல்

தலைவரை உயிராய் நேசிக்கும் கழகத் தோழர்களே, வணக்கம்!

தமிழர் நலனுக்காக கால் கடுக்க, உடல் வலிக்க சமத்துவ நடைபயணம் மேற்கொண்டு வரும் தலைவர் வைகோ அவர்களை வரவேற்று, அவரது தியாகத்திற்கு நன்றி செலுத்திட மதுரையில் 12.01.2026 அன்று நடைபெற உள்ள நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்க வாரீர்!

இயக்கத் தந்தை, தலைவர் வைகோ அவர்கள், தனது 82வது வயதிலும், எல்லோரும் உங்களால் முடியாது என்றபோதும், வேண்டாம் என்று தடுத்தும், தன் உடல் உபாதைகளை ஒரு பொருட்டாக கருதாமல்,

தமிழர்களின் நலனையும், தமிழ்நாட்டின் எதிர்காலமாம் இளைஞர்களின் வாழ்வையும் எண்ணி, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் கால் கடுக்க, உடல் வலிக்க திருச்சி முதல் மதுரை வரை 160 கி.மீ.க்கும் மேற்பட்ட தூரத்தை, 02.01.2026 முதல் 12.01.2026 வரை, பகல் வெயிலிலும், மாலை குளிரிலும் தொடர்ந்து 11 நாட்கள் மேற்கொண்டு வரும் சமத்துவ நடைபயணத்தை, எதிர்வரும் 12.01.2026 அன்று மதுரை மாநகரில் வெற்றிகரமாக நிறைவு செய்கிறார்.

தலைவருடன் தோளோடு தோள்நின்று இந்த நடைபயணத்தில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும்,

தமது சமத்துவ நடைபயணத்தால் கழகத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டி புது ரத்தம் பாய்ச்சியுள்ள இயக்கத் தந்தைக்கும் நெஞ்சார்ந்த நன்றி பாராட்டிடும் மாபெரும் நிறைவு விழாவில், கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பு சேர்க்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறேன்.

வழியெங்கும் வரவேற்பளிக்க வேண்டும் எனும் உன்னத நோக்கில், திருச்சி மாவட்டத் தோழர்கள் ஆங்காங்கே திரண்டு நின்று வரவேற்றதாலும், பிற மாவட்டத் தோழர்கள் நடைபயண வழியெங்கும் வரவேற்பு ஏற்பாடு செய்ததாலும் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது போலல்லாமல், இம்முறை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு போன்று மாபெரும் கூட்டமாக மதுரையில் நிறைவு விழாவை அமைத்து, “மதுரையே குலுங்கியது!” என்ற செய்தியை உலகறியச் செய்ய வேண்டுமாய், உங்களிடம் உரிமையும் அன்பும் கொண்டு கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, தலைவருக்கும் நடைபயண வீரர்களுக்கும் அர்ப்பணிக்கும் நோக்கில் புதியதொரு முயற்சியை விழா மேடையில் அரங்கேற்ற திட்டமிட்டுள்ளேன். அதனையும் கண்டுகளிக்க தவறாது பங்கேற்க வாரீர் என்று அழைக்கிறேன்.

கழக நிர்வாகிகளே, தோழர்களே, தொண்டர்களே அணிதிரண்டு வாரீர்!

நடைபயணம் வென்றது என்று ஓங்கி முழங்கி உலகறியச் செய்யும் இவ்விழாவை மாபெரும் வெற்றியாக்கிடுவீர்!

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக,
09.01.2026

NTTadmin

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

Related Posts

வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் புசி ஆனந்த் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28ஆவது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா திறந்து வைத்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *