
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த .தேவராஜ் வேலு அங்கே திடீரென மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் துரை வைகோ எம்.பி யை தொடர்பு கொண்டு, உடலை தாயகம் கொண்டு வர உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று, உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார் துரை வைகோ.
அதன் தொடர்ச்சியாக, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 11.02.2026 அன்று தேவையான அனுமதி (NOC) வழங்கி, உள்ளூர் காவல் அனுமதி, இறுதி வெளியேற்ற அனுமதி, எம்பால்மிங், சரக்கு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த செயல்முறைகள் முடிவடைந்தவுடன் விமான பயண விவரங்களை குடும்பத்தினருக்கு நேரடியாக தெரிவிப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது உடலை விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் தொடர்ந்து வழங்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் துரை வைகோ எம்.பி.
திரு. தேவராஜ் வேலு அவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் முழுமையாக பங்கெடுத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவேன் என்று வேலு அவர்களின் குடும்பத்தினரிடம் உறுதியளித்தார் துரை வைகோ எம்.பி .





