
வருகின்ற 2026 ஏப்ரல் 23 அன்று தமிழக சட்டசபைக்கு வாக்குபதிவு நடைபெறுகிறது. இது சமயம் திருச்சி ஸ்ரீரங்கம் -139 – சட்டமன்ற தொகுதியில் வரும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி 2, 3 வார்டுகளில் அடங்கிய முக்கிய பாதையாக விளங்கும் கீழவாசல் கோபுர வழி இந்த கோபுர பராமரிப்புக்காக சுமார் 3வருடங்களாக பூட்டிக்கிடக்கிறது . இந்த முக்கிய பாதை வழியாக இந்த பகுதி மக்கள் குறிப்பாக கீழ உத்திரை சித்திரை – கீழ அடையவளஞ்சான் – கீழவாசல் சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்களது வாக்குகளை செலுத்த சுமார் 15-க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகள் Dr ராஜன் ஸ்கூல் – கிழக்கு ரெங்கா- பெண்கள் – ஆண்கள் மேல் நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கீழவாசல் கோபுர முக்கிய பாதை அடைக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் Ikm சுற்றி வந்து வாக்களிக்கும் நிலை ஏற்படுகிறது . இதனை சுற்றி வர பயந்து பலர் வாக்களிக்கவே வர முயற்சி செய்யாமல் வீட்டிலியே முடங்கி விடுவர் . இதனால் இங்கு வாக்கு பதிவு சதவிதம் குறைய வாய்ப்பு உள்ளது .

எனவே 2026ஸ்ரீரங்கம் தொகுதி மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் திருச்சி மாவட்ட கலெக்டர் உடனடியாக இதில் தலையிட்டு ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திடம் பேசி- ஏப்ரல் 23 வாக்குபதிவுக்குள் இந்த முக்கிய கீழவாசல் கோபுர பாதையை திறந்து விடும் படி ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் இதன் மூலம் கோரிக்கை வைக்கிறது .

குறிப்பாக வரும் 2026 ஶ்ரீரங்கம்-139 சட்டமன்ற தேர்தலுக்கு இங்கு போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் கட்சி வேறுபாடு இல்லாமல் வரும் தேர்தலில் இங்கு 100% வாக்கு சதவீதம் பெற இந்த 15க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளுக்கு செல்வதற்கு முக்கிய வழியாக உள்ள பூட்டிக் கிடக்கும் கீழவாசல் கோபுர பாதையை உடனடியாக திறக்க தமிழக அரசுக்குக்கும் – HRCE-க்கும் திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருக்கும் கோரிக்கை வைக்க வேண்டும் இதன் மூலம் வேண்டுகிறோம்.

என்றும் ஸ்ரீரங்கம் மக்கள் சேவையில்..
ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் .
தலைவர் முனைவர் S.N. மோகன்ராம்-9952875881.





