திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு… பல ஆண்டுகளாகமூடிக் கிடக்கும் கீழவாசல் கோபுரத்தால்ஸ்ரீரங்கத்தில் வாக்கு பதிவு குறைய வாய்ப்பு…நடவடிக்கை எடுப்பரா ? திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி ….ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் கோரிக்கை..

வருகின்ற 2026 ஏப்ரல் 23 அன்று தமிழக சட்டசபைக்கு வாக்குபதிவு நடைபெறுகிறது. இது சமயம் திருச்சி ஸ்ரீரங்கம் -139 – சட்டமன்ற தொகுதியில் வரும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி 2, 3 வார்டுகளில் அடங்கிய முக்கிய பாதையாக விளங்கும் கீழவாசல் கோபுர வழி இந்த கோபுர பராமரிப்புக்காக சுமார் 3வருடங்களாக பூட்டிக்கிடக்கிறது . இந்த முக்கிய பாதை வழியாக இந்த பகுதி மக்கள் குறிப்பாக கீழ உத்திரை சித்திரை – கீழ அடையவளஞ்சான் – கீழவாசல் சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்களது வாக்குகளை செலுத்த சுமார் 15-க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகள் Dr ராஜன் ஸ்கூல் – கிழக்கு ரெங்கா- பெண்கள் – ஆண்கள் மேல் நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கீழவாசல் கோபுர முக்கிய பாதை அடைக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் Ikm சுற்றி வந்து வாக்களிக்கும் நிலை ஏற்படுகிறது . இதனை சுற்றி வர பயந்து பலர் வாக்களிக்கவே வர முயற்சி செய்யாமல் வீட்டிலியே முடங்கி விடுவர் . இதனால் இங்கு வாக்கு பதிவு சதவிதம் குறைய வாய்ப்பு உள்ளது .

எனவே 2026ஸ்ரீரங்கம் தொகுதி மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் திருச்சி மாவட்ட கலெக்டர் உடனடியாக இதில் தலையிட்டு ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திடம் பேசி- ஏப்ரல் 23 வாக்குபதிவுக்குள் இந்த முக்கிய கீழவாசல் கோபுர பாதையை திறந்து விடும் படி ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் இதன் மூலம் கோரிக்கை வைக்கிறது .


குறிப்பாக வரும் 2026 ஶ்ரீரங்கம்-139 சட்டமன்ற தேர்தலுக்கு இங்கு போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் கட்சி வேறுபாடு இல்லாமல் வரும் தேர்தலில் இங்கு 100% வாக்கு சதவீதம் பெற இந்த 15க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளுக்கு செல்வதற்கு முக்கிய வழியாக உள்ள பூட்டிக் கிடக்கும் கீழவாசல் கோபுர பாதையை உடனடியாக திறக்க தமிழக அரசுக்குக்கும் – HRCE-க்கும் திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருக்கும் கோரிக்கை வைக்க வேண்டும் இதன் மூலம் வேண்டுகிறோம்.


என்றும் ஸ்ரீரங்கம் மக்கள் சேவையில்..
ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் .
தலைவர் முனைவர் S.N. மோகன்ராம்-9952875881.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி

    இன்று (21.08.2026) மாலை 5.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார் துரை வைகோ…

    முன்னாள் பாரதப்பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்

    அமரர் பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பட்டேல், செந்தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *