
திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜசேகருக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் நடத்தி வரும் இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதிமுக வேட்பாளர் நடத்தி வரும் கல்வி நிறுவனத்துக்கு நேற்று மாலை 2 கார்களில் வந்த அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ராஜசேகரன் தனது பிரச்சார பயணத்தில் இருக்கும் பொழுது இந்த அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கல்லூரியில் பணியாற்றும் பலரது வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வரவு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதாகவும் பேசப்படுகிறது.
தேர்தலில் பணப்பட்டுவாடாவுக்கு ஏதும் பணம் பதுக்கல் அங்கு இருக்கலாம் என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தியதாக கூறப்படுகிறது.





