
திருச்சி ஏப்.10-
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்
ஆர். மனோகரன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமம் கிராமமாக சென்று, வீதி வீதியாக வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இவருக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதி பொறுப்பாளராக இருந்து தொகுதி முழுவதும் மக்கள் நலத் திட்டங்களை கொண்டு போய் சேர்த்தவர் என்பதால் மக்கள் உற்சாக வரவேற்பு அவருக்கு அளிக்கின்றனர்.

அந்த வகையில் மணிகண்டம் தெற்கு ஒன்றியம் ஆலந்தூர் செவல்பட்டி தென்றல் நகர் சூரைக்குடிபட்டி சந்தானத்தான்குறிச்சி கோடாங்கி பட்டி குள்ளம்பட்டி பாத்திமா நகர் செவ்வந்திான் பட்டி ஐயன்தோப்பு கொட்டப்பட்டு துறைக்குடி குலவாய்ப்பட்டி கொழுக்கட்டை குடி முள்ளிப்பட்டி திருமலை சமுத்திரம் ஓலையூர் பாலன் நகர் ஆகிய பகுதிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்காளர்கள் மத்தியில் ஆர் மனோகரன் பேசும் போது,

இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் தெற்கு ஒன்றியம் செயலாளர் எஸ் பி முத்துகருப்பன், மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து , ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் மத்திய அரசு நலப்பிரிவு மாநில செயலாளர் எம் பி முரளிதரன், அதிமுக

மாவட்ட பொருளாளர் சேவியர்,
மாவட்ட மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் கேடி தனபால், பாசறை சோனா விவேக்,முன்னாள் அரசு வழக்கறிஞர் வழக்கறிஞர் அணி வெங்கடேசன்,

ஸ்ரீரங்கம் பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம். பி. பாஸ்கர்,
சாத்தனூர் வாசு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…










