மதுர ரயில்வே கோட்ட மேலாளருடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் ரயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து இன்று (13.06.2026) துரை வைகோ எம்.பி மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து விரிவாக கலந்துரையாடினார்.

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர், RO வசதி, தேசியக் கொடி ஏற்றுதல், அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவு செய்தல், General Quota மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

மேலும், உடயான்பட்டி மற்றும் பூங்குடி மேம்பாலங்கள், கூடுதல் ரயில் சேவைகள், DEMU மற்றும் ஷட்டில் ரயில் நீட்டிப்புகள், கீரனூர் ROB, இனாம்குளத்தூர் ரயில்வே கேட்டில் நிலத்தடி மின்கம்பி அனுமதி, கோவில்பட்டி மழைநீர் வடிகால் திட்டத்திற்கு NOC உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

புதுக்கோட்டை அம்ரித் பாரத் பணிகள் நவம்பர் 2026-க்குள் நிறைவடையும், General Quota கோரிக்கை பரிசீலிக்கப்படும், கீரனூர் ROB மற்றும் இனாம்குளத்தூர் பிரச்சினைகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.

இனாம்குளத்தூர் நிலத்தடி மின்கம்பி பணிக்கு விரைவில் தீர்வு காண, ரயில்வே மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடையே தனது அலுவலகம் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் என அவரிடம் உறுதியளித்தார் துரை வைகோ எம்.பி.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் உருவான நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்த துரை வைகோ எம்.பி

    மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமல்ல, அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் இதுபோன்ற மக்கள் நலப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், மக்கள் பணிக்கான அரசியலின் உண்மையான வெற்றியாக நான் கருதுகிறேன். அதன்படி, இன்று (12.06.2026)…

    திருச்சி பாராளுமன்ற தொகுதொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம், வாழவந்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட துரை வைகோ எம்.பி

    எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களின் இன்று (11.06.2026) துறை சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டேன். முதலில், திருச்சி, திருவரங்கம் வார்டு எண் 1 இல் வார்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நமது எம்பி நிதியில் ஏற்கனவே…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *