மதுர ரயில்வே கோட்ட மேலாளருடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் ரயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து இன்று (13.06.2026) துரை வைகோ எம்.பி மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து விரிவாக கலந்துரையாடினார்.

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர், RO வசதி, தேசியக் கொடி ஏற்றுதல், அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவு செய்தல், General Quota மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

மேலும், உடயான்பட்டி மற்றும் பூங்குடி மேம்பாலங்கள், கூடுதல் ரயில் சேவைகள், DEMU மற்றும் ஷட்டில் ரயில் நீட்டிப்புகள், கீரனூர் ROB, இனாம்குளத்தூர் ரயில்வே கேட்டில் நிலத்தடி மின்கம்பி அனுமதி, கோவில்பட்டி மழைநீர் வடிகால் திட்டத்திற்கு NOC உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

புதுக்கோட்டை அம்ரித் பாரத் பணிகள் நவம்பர் 2026-க்குள் நிறைவடையும், General Quota கோரிக்கை பரிசீலிக்கப்படும், கீரனூர் ROB மற்றும் இனாம்குளத்தூர் பிரச்சினைகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.

இனாம்குளத்தூர் நிலத்தடி மின்கம்பி பணிக்கு விரைவில் தீர்வு காண, ரயில்வே மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடையே தனது அலுவலகம் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் என அவரிடம் உறுதியளித்தார் துரை வைகோ எம்.பி.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    துரை வைகோ எம்.பி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

    இன்று (22.07.2026) திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளோடு மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியில் உள்ள அலுவலகத்தில் துரை வைகோ எம்.பி சந்தித்தார். முதலாவதாக, திருச்சிராப்பள்ளியில் உலர் துறைமுகம் (Dry Port…

    அறநிலையத்துறை அமைச்சரின் தொகுதியில் அவலநிலை. சிவன் கோயில் – கேவலமான ஊதியப் பட்டியல்: இது சம்பளமா அல்லது பிச்சையா? ஆர்டிஐ வெளிக்கொணரும் அதிர்ச்சி, மாத ஊதியம்: ரூ. 200. முதல் ரூ. 7,000. வரை.

    ஆன்மீக பூமிக்கு நேர்ந்த அவலம்: திருவாசக சாட்சியுடன் ஒரு வயித்தெரிச்சல் ஆதங்கம்! அரசின் கவனத்திற்கு: ஸ்ரீரங்கம் தொகுதி, திருப்பராய்த்துறை சிவன் கோவில் அவல நிலை. ஆன்மீகமும் இறையருளும் பொங்க வேண்டிய திருக்கோயில்களில், இன்று உழைப்புக்கும் மனித நேயத்திற்கும் எதிராக அரங்கேறிவரும் கொடுமைகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *