
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் ரயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து இன்று (13.06.2026) துரை வைகோ எம்.பி மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து விரிவாக கலந்துரையாடினார்.
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர், RO வசதி, தேசியக் கொடி ஏற்றுதல், அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவு செய்தல், General Quota மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மேலும், உடயான்பட்டி மற்றும் பூங்குடி மேம்பாலங்கள், கூடுதல் ரயில் சேவைகள், DEMU மற்றும் ஷட்டில் ரயில் நீட்டிப்புகள், கீரனூர் ROB, இனாம்குளத்தூர் ரயில்வே கேட்டில் நிலத்தடி மின்கம்பி அனுமதி, கோவில்பட்டி மழைநீர் வடிகால் திட்டத்திற்கு NOC உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
புதுக்கோட்டை அம்ரித் பாரத் பணிகள் நவம்பர் 2026-க்குள் நிறைவடையும், General Quota கோரிக்கை பரிசீலிக்கப்படும், கீரனூர் ROB மற்றும் இனாம்குளத்தூர் பிரச்சினைகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.
இனாம்குளத்தூர் நிலத்தடி மின்கம்பி பணிக்கு விரைவில் தீர்வு காண, ரயில்வே மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடையே தனது அலுவலகம் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் என அவரிடம் உறுதியளித்தார் துரை வைகோ எம்.பி.





