மது போதையில் இருந்த எஸ் எஸ் ஐ பணியில் மெத்தனமாக இருந்த காவலர் சஸ்பெண்ட் – திருச்சி மாநக காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் அதிரடி.

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தமிழரசன் இவர் நேற்று இரவு பனியின் பொழுது மது போதையில் இருந்துள்ளார். அதேபோல இதே காவல் நிலையத்தில் பணியாற்றும் மணிகண்டன் என்ற காவலர் பணிக்கு வராமல் மெத்தனமாக இருந்துள்ளார்.

இது குறித்த தகவலின் பெயரில் விசாரணை நடத்திய திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் மதுபோதையில் பணியாற்றிய தமிழரசன் பணியில் மெத்தனமாக இருந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பு உதவி ஆய்வாளரும் காவலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *