திருச்சியில் கொட்டும் மழையிலும் அமரன் படத்தை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி முற்றுகை போராட்டம்..


முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி இன்று SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக சோனா மீனா திரையரங்கை மாவட்டத் தலைவர்
K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி மற்றும் பொது செயலாளர் முகமது சித்திக் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத்,தளபதி.அப்பாஸ்,மதர்.Yஜமால் முஹம்மது, மாவட்ட பொருளாளர் நியாமத்துல்லா,மாவட்ட செய்தி தொடர்பாளர் Dr.S.பக்ருதீன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் K.முபாரக் அலி,பொன்னகர்.ரபீக்,இமாம்.சாகுல் ஹமீது இன்ஆமி,Er.N.G.சதாம் உசேன்,A.S. அப்துல் காதர் (பாபு),SDTU மாவட்ட தலைவர் முஸ்தபா,செயலாளர் சக்கரை மீரான்,சுற்று சூழல் அணி தலைவர் Ss. ரஹ்மத்துல்லா,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் MAJ.சாதிக் பாஷா,வர்த்தகர் அணி செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, அ.அப்துல் மாலிக்,தொண்டரணி தலைவர் முகமது ஆரிப்,கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா,திருவெறும்பூர் தொகுதி தலைவர் Er.I. ஷேக் முகமது,ஶ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசிர்,மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா,விம் மாநில செயற்குழு உறுப்பினர் மெஹராஜ் பானு,விம் திருச்சி மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, துணைத் தலைவர் மூமினா பேகம்,விம் திருவெறும்பூர் தொகுதி தலைவர் பாத்திமா,ஊடக அணி மண்டல தலைவர் KSA. ரியாஸ்,ஊடக அணி செயலாளர் J.B.பாபு,உள்ளிட்ட நிர்வாகிகள்,கிளை,தொகுதி,அணி நிர்வாகிகள்,பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துக் கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *