இமக நிர்வாகி ஓம்கார் பாலாஜி நள்ளிரவில் கைது- போராட்டம் அறிவித்தார் நிறுவனர் அர்ஜூன் சம்பத்

இமக தலைமை அறிவிப்பு!

ஓம்கார் பாலாஜி கைது !
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்த அழைப்பு !

இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில தலைவர் திரு ஓம்கார் பாலாஜி அவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் கோபால் குறித்து மிரட்டும் தோனியில் பேசியதாக கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்

திரு ஓம்கார் பாலாஜி அவர்கள் தனது வழக்கறிஞர் மூலம் நியாயம் கிடைக்க வேண்டி நீதிமன்றத்தை நாடி இருந்தார். சென்னை உயர்நீதிமன்றம் திரு ஓம்கார் பாலாஜி அவர்களை வருகிற புதன்கிழமை அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திரு ஓம்கார் பாலாஜியை காவல்துறையினர் அத்துமீறி கைது செய்தனர் இது முற்றிலும் தவறான முன்னுதாரணம் ஆகும்.
நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

நீதிமன்றம் ஓம்கார பாலாஜிக்கு அவகாசம் அளித்துள்ளதையே மீறி நள்ளிரவில் அத்துமீறி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோத
காவலில் வைத்துள்ளனர்.

இதனை கண்டிக்கும் விதமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் தமிழக முழுவதும் இன்று காலை 11 மணியளவில் திரு ஓம்கார் பாலாஜி அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    அறநிலையத்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியின் அவலம்ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை.

    திருப்பராய்த்துறை பஞ்சாயத்து பணியாளர்கள் மூவரை மாற்ற மக்கள் கோரிக்கை, திருப்பராய்த்துறை தண்ணீர் பிரச்சனை என்பது திட்டமிட்ட சதி வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று ஒரு சாரார் குற்றம் வைக்கின்றனர். திருப்பராய்த்துறை ஊராட்சியில் இருந்து கிட்டத்தட்ட தமிழக முழுவதற்கும் தண்ணீர் செல்கிறது. ஆனால் அங்கு…

    ஸ்ரீரங்கத்தை “சிங்கப்பூர்” ஆக்க ரத, கஜ, துரக, பதாதிகளை களமிறங்கிய அமைச்சர் ரமேஷ்.சதுரங்க சேனைகளின் களப்பணி- நந்தவன மக்களின் 16 ஆண்டுகாலத் துயருக்குத் தீர்வு கிடைக்குமா?

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொகுதி பிரச்சனைகளை பூதக்கண்ணாடிக்கொண்டு அலசும் சதுரங்க சேனைகள். தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சரும், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ரமேஷ், தனது தொகுதியை மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *