வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி: நவ18

தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி தமிழக முழுவதும் நவம்பர் 16 17 23 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெற உள்ளது
மேலும் இதன் ஒரு பகுதியாக இன்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல் துறை அமைச்சரும்மானஅன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி, காட்டூர் புனித லோமினால் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தொகுதி சஞ்சீவி நகர் சமுதாயக்கூடம் உட்பட்ட இடங்களில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்மை நேரில் சென்று ஆய்வு செய்தார் மேலும் அப்போது அவர் கழக நிர்வாகிகளுடன் எவ்வாறு பணி செய்வது என்று அறிவுறுத்தினா,அதிகாரிகளிடம் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை குறித்தும் கேட்டறிந்தார் மேலும் இந்த முகாமில் இன்று சுமார் 75 பேர் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் மாற்றுதல் பெயர் மாற்றுதல், ஆகியவைகளை திருத்திக் கொண்டனர்

மேலும் இந்த ஆய்வின்போது மாநகர செயலாளர் மண்டல தலைவருமான மதிவாணன் பகுதி செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், மோகன், சிவக்குமார், மற்றும் பாக முகவர்கள் வட்ட கிளைகழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *