ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது ஆப்பக்கூடு குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், அடுப்படியில் மத்து, கரண்டி, துடுப்பு போன்றவற்றை செருகி வைக்கப் பயன்படும் மரத்தாலான துளைகளுள்ள பலகை ஆப்பக்கூண்டு = ஆப்பக்கூட்டு = ஆப்பக்கூடு என்பர். ஆப்பக்கூடானது மரத்தில் இருந்து செதுக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான வடிவத்துடன் உள்ள துளைகளில் மத்து, அகப்பை, துடுப்பை சொருகி வைப்பார்கள். பழங்காலத்தில் வீட்டில் பெரியவர்கள் எய்யா சின்னவன அந்த ஆப்பக்கூண்டுல கீற மத்த எடுத்துத் தந்துட்டு போய்யா என்ற குரலை கேட்டிருக்கலாம். அதற்கு தாத்தா
நம்மூட்ல கீற ஆப்பக்கூடானது, ஆசாரி நீ பொறக்கறதுக்கு முன்னாடி செஞ்சி தந்தது, தெரியுமா என்பார். மாற்றம் ஒன்றே மாறாதது. சிந்நனையின் தொடர்ச்சியே அறிவியல் வளர்ச்சி.
அறிவியல் வளர்ச்சியே தொழில்நுட்ப புரட்சி. இதனால் ஆப்பக்கூடு பயன்பாடு வழக்கொழிந்து விட்டது. அதனால் இன்று பாரம்பரிய பொருளாகவும் இளம் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் பொருளாகவும் மாறிவிட்டது என்றார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நதியில் கரைந்த உயிர்கள் – கண்ணீர் கடலில் உறவுகள் – ஆறுதலாய் தோள் கொடுத்த துரை வைகோ

    எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி, நாவல்பட்டு அண்ணா நகரில் வசித்துவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள், மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் பர்கி அணை நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கிக் கொண்ட செய்தி அறிந்து கவலையும் வருத்தமும்…

    புற்றுநோயிலிருந்து மீண்டு வர(ம்) ஒரு அற்புத தலம்

    புற்றுநோயைத் தீர்க்கும் ‘பராய்’ மரத்தின் அதிசயம்!திருப்பராய்த்துறை: அகந்தை அறுத்து, புற்றுநோய் நீக்கும் அற்புதத் தலம்! ஆன்மீகப் பேரொளியும், மருத்துவ அதிசயமும் ஒருங்கே அமைந்த காவிரி தென்கரைத் திருத்தலம்! திருச்சிராப்பள்ளியிலிருந்து கரூர் செல்லும் சாலையில், காவிரியின் தென்கரையில் அமைதி தவழும் சூழலில் வீற்றிருக்கிறது…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *