ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது ஆப்பக்கூடு குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், அடுப்படியில் மத்து, கரண்டி, துடுப்பு போன்றவற்றை செருகி வைக்கப் பயன்படும் மரத்தாலான துளைகளுள்ள பலகை ஆப்பக்கூண்டு = ஆப்பக்கூட்டு = ஆப்பக்கூடு என்பர். ஆப்பக்கூடானது மரத்தில் இருந்து செதுக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான வடிவத்துடன் உள்ள துளைகளில் மத்து, அகப்பை, துடுப்பை சொருகி வைப்பார்கள். பழங்காலத்தில் வீட்டில் பெரியவர்கள் எய்யா சின்னவன அந்த ஆப்பக்கூண்டுல கீற மத்த எடுத்துத் தந்துட்டு போய்யா என்ற குரலை கேட்டிருக்கலாம். அதற்கு தாத்தா
நம்மூட்ல கீற ஆப்பக்கூடானது, ஆசாரி நீ பொறக்கறதுக்கு முன்னாடி செஞ்சி தந்தது, தெரியுமா என்பார். மாற்றம் ஒன்றே மாறாதது. சிந்நனையின் தொடர்ச்சியே அறிவியல் வளர்ச்சி.
அறிவியல் வளர்ச்சியே தொழில்நுட்ப புரட்சி. இதனால் ஆப்பக்கூடு பயன்பாடு வழக்கொழிந்து விட்டது. அதனால் இன்று பாரம்பரிய பொருளாகவும் இளம் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் பொருளாகவும் மாறிவிட்டது என்றார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நெஞ்சுக்கு நிம்மதி – குடும்பங்களுக்கு ஆறுதல் – சமயத்தில் உதவிய மனிதாபிமானம்

    ஆறு மாதப் போராட்டங்களுக்குப் பின்பு ரஷ்யா – உக்ரைன் போர்க்களத்தில் இருந்து கிஷோர் சரவணன் மீட்கப்பட்டார் மியான்மரில் சித்ரவதைக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். நெஞ்சுக்கு நிம்மதி கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கிஷோர் சரவணன் மருத்துவம் படிப்பதற்காக…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *