ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது ஆப்பக்கூடு குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், அடுப்படியில் மத்து, கரண்டி, துடுப்பு போன்றவற்றை செருகி வைக்கப் பயன்படும் மரத்தாலான துளைகளுள்ள பலகை ஆப்பக்கூண்டு = ஆப்பக்கூட்டு = ஆப்பக்கூடு என்பர். ஆப்பக்கூடானது மரத்தில் இருந்து செதுக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான வடிவத்துடன் உள்ள துளைகளில் மத்து, அகப்பை, துடுப்பை சொருகி வைப்பார்கள். பழங்காலத்தில் வீட்டில் பெரியவர்கள் எய்யா சின்னவன அந்த ஆப்பக்கூண்டுல கீற மத்த எடுத்துத் தந்துட்டு போய்யா என்ற குரலை கேட்டிருக்கலாம். அதற்கு தாத்தா
நம்மூட்ல கீற ஆப்பக்கூடானது, ஆசாரி நீ பொறக்கறதுக்கு முன்னாடி செஞ்சி தந்தது, தெரியுமா என்பார். மாற்றம் ஒன்றே மாறாதது. சிந்நனையின் தொடர்ச்சியே அறிவியல் வளர்ச்சி.
அறிவியல் வளர்ச்சியே தொழில்நுட்ப புரட்சி. இதனால் ஆப்பக்கூடு பயன்பாடு வழக்கொழிந்து விட்டது. அதனால் இன்று பாரம்பரிய பொருளாகவும் இளம் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் பொருளாகவும் மாறிவிட்டது என்றார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வு காண தொடர் முயற்சிகளில் துரை வைகோ எம்.பி

    இன்று மீண்டும் ஒரு முறை மாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வு காணும் பொருட்டு தற்போது…

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *