தந்தை வடிவில் உள்ள காமக்கொடூர விலங்கிற்கு கை-விலங்கிட்டது காவல்துறை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் : 9715328420

மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது!

தாராபுரத்தில் பெற்ற மகளை 4,வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.ஆண்டனி விக்டர் நோயல் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி விக்டர் நோயல்(46) தனியார் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தில் பீல்ட் ஆபீஸ் ஆக பணியாற்றி வருகிறார்.இவர் தனது 12 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அவரது மனைவி, தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லிராணி இன்று ஞாயிற்றுக்கிழமை
சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ்,ஆண்டனி விக்டர் நோயல் கைது செய்து. தாராபுரம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி , சிறையில் அடைத்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருப்பராய்த்துறை சிவன் கோயில் செயல் அலுவலர் பிரபாகரனைக் கண்டு கொலை நடுங்கும் ராமகிருஷ்ண தபோவன சுவாமிகள். காரணம் என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட். ராமகிருஷ்ண தபோவன ஃபைல்ஸ் 1/22 , உபயம்:RTI

    திருவாசகம்:”நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பல ஆண்டுகளாக திட்டமிட்டு பதுக்கப்பட்டிருந்த, அமைதியாக கிடந்த கோப்புகள், ஒரு அதிகாரியின் வருகையால் உயிர் பெற்றதாகக் கூறப்படுகிறது. செயல் அலுவலர் பிரபாகரன் பொறுப்பேற்ற…

    சாமியார்களா குண்டர்களா? ஆசிரியர்களா கூலிப்படையா?நேர்மையான மக்களின் மனம் கவர்ந்த TVK ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க சதியா!

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கூலிப் படைகளால், குண்டர்களால் திறக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் காலையில் கல்லான சிவபெருமான் முன்னே, பள்ளி குழந்தைகள் முன்னே, பெற்றோர்கள் முன்னே, பொதுமக்கள் முன்னே, சிவன்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *