தந்தை வடிவில் உள்ள காமக்கொடூர விலங்கிற்கு கை-விலங்கிட்டது காவல்துறை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் : 9715328420

மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது!

தாராபுரத்தில் பெற்ற மகளை 4,வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.ஆண்டனி விக்டர் நோயல் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி விக்டர் நோயல்(46) தனியார் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தில் பீல்ட் ஆபீஸ் ஆக பணியாற்றி வருகிறார்.இவர் தனது 12 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அவரது மனைவி, தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லிராணி இன்று ஞாயிற்றுக்கிழமை
சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ்,ஆண்டனி விக்டர் நோயல் கைது செய்து. தாராபுரம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி , சிறையில் அடைத்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *