
தமிழக வெற்றிக் கழக மாநாடு திருச்சியில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக விஜய் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு
தமிழக வெற்றி கழக மாநாடு விக்கிரவாண்டியில் வருகின்ற 27ஆம் தேதி நடக்கின்றது மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது இந்த நிலையில் மாநாட்டிற்கு தொண்டர்களை அழைக்கும் விதமாக திருச்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் விஜய் படம் போடப்பட்ட பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன அதேபோல திருச்சியில் பாலக்கரை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் செங்குளம் காலனி பீமநகர் கூனி பஜார் ஆகிய இடங்களில் அனுமதி இன்றி பேனர்கள் வைத்ததாக பாலக்கரை போலீசார் தமிழக வெற்றிக்கழக வழக்கரை பகுதி செயலாளர் சிவக்குமார் மற்றும் பாலக்கரை கோரிமேடு பகுதியை சேர்ந்த ரோபோ வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர் இது தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது