மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே குடிக்கும் தண்ணீர் மஞ்சள் நிறமே

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் கீழத்தெரு பகுதியில் கடந்த இரு தினங்களாக குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் பொதுமக்கள் நோய் அபாயத்தில் சிக்கி உள்ளனர்.

கடந்த இரு தினங்களாகவே நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரானது மஞ்சள் நிறத்தில் கலங்கலாக வந்து கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய் அபாயம் உள்ளதாகவும் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி வரும் சூழலில் குடிநீர் இப்படி கலங்கலாக வருவதால் எங்கே குழந்தைகளும் வயதானவர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவார்களோ என்று கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

திருப்பராய்த்துறை ஊராட்சி நிர்வாகம் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு சுத்தமான சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே திருப்பராய்த்துறை கீழத்தெரு கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *