அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்

இன்று (30.11.2024) அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி காட்டுரில்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி அவர்கள் NSNOP – Success in Health Care and Education (SHE)யின்சாற்பாக
மாணவியர்களுக்கு Basic Life Support (BLS) என்ற மாரடைப்பு நிலையில் உள்ள நோயளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்வரை உள்ள அவசர கால முதலுதவியை எவ்வாறு வழங்குவது என்பதை குறித்த CPR (கார்டியோ நுரையீரல் புத்துயிர்) முதலுதவி பயிற்சியானது பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளாகள் மூலம் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி துவாக்குடியில் 25.11.2024 அன்று SHE என்ற திட்டத்தின் மூலம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 75 மாணவிகள் மேலும் இப்பயிற்சியானது 26.11.2024 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி தேனேரிப்பட்டியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 130 மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் 28.11.2024, 29.11.2024 ஆகய நாட்களில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி காட்டுர்பாப்பாக்குறிச்சியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 320 மாணவ மாணவியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு CPR முதலுதவி குறித்த விழிப்புணர்வை பெற்றனர்.
CPR (கார்டியோ நுரையீரல் புத்துயிர்) முதலுதவி பயிற்சியானது திருமதி. ஆர்த்தி ராஜேந்திரன் மேலாளர், நேசனல் ஹெல்த் கேர், UK, திரு. அருண் ஸ்டிபன் ஜெய்சிங், Educaitonal Service Specialist, LAERDAL , Senior Territory Manager, LAERDAL ஆகியோர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வை
திருச்சிராப்பள்ளி மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர்
திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினர் நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *