மதுபான கடைகளுக்கு எதிரான உண்ணாநிலை போராட்டம்-அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அழைப்பு

அன்புடையீர்க்கு வணக்கம்,

கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதல்வர், மக்கள்செல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க,

தலைமை நிலைய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு M.ராஜசேகரன் அவர்களின் ஆலோசனையின் படி,

மதுபானங்களுக்கு எதிரான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக போராட்டங்களின் ஒரு அங்கமாக,

மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர் பகுதியில் இயங்கி வரும் இரண்டு மதுபான கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி, மாண்புமிகு மதுரை உயர் நீதிமன்ற கிளையின் அனுமதியுடன்,

திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக, உறையூர் குறத் தெருவில், வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறப் போகும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கழக நிர்வாகிகள் அனைவரும், தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இ்வ் உண்ணாவிரத போராட்டம், தற்பொழுது இரண்டு மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்தாலும், இதுவே திருச்சி மாநகரில், உயிர்பலிகள் வாங்கி, மக்கள் பாதிப்படையும் வகையில் இயங்கி வரும் மேலும் மதுக்கடைகளை (முடுக்குபட்டி பாலம், புத்தூர் நான்கு முனை, தென்னூர் அரச மரத்தடி, சஞ்சீவ் நகர் புறவழிச்சாலை, பால்பண்ணை சென்னை புறவழிச்சாலை, உய்யக்கொண்டான் பாலம், சிந்தாமணி அண்ணா சிலை அருகே போன்றவற்றை), அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பாகும்.

எனவே இவ் உண்ணாவிரத போராட்டத்தில், முறைகேடான மது விற்பனைக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர்களும், மதுவின் தீமையை எடுத்துரைக்கும் நல்லோரும், மது அரக்கனால் பாதிக்கப்பட்டவர்களும், எங்கள் கழக உறுப்பினர்களுடன் பங்கு பெற்று, முறைகேடான மதுவிற்பனைகளுக்கு எதிரான போரில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

மக்கள்செல்வர் வழியில்,
ப.செந்தில்நாதன் BE, MBA (UK), Ex MC,
மாவட்டச் செயலாளர்,
திருச்சி மாநகர் மாவட்டம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *