பெண் தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் – தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் – ஆய்வறிக்கை வெளியீட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி டிச 05

தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான பெண் தொழிலாளர்கள் மாநாடு மற்றும் உள்ளக புகார் குழு ஆய்வாரிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள டி.எம்.எஸ்.எஸ் ஹாலில் திருப்பத்தூர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்து ஆய்வறிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் கரூர் நாகலட்சுமி, புதுக்கோட்டை லலிதா, தர்மபுரி லட்சுமி, தஞ்சாவூர் சாமுண்டீஸ்வரி மற்றும் மாநில பெண் தொழிலாளர்கள் அமைப்பின் நிர்வாகி சுந்தரபாபு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, தேசிய மக்கள் சுகாதார அமைப்பின் நிர்வாகி அமீர்கான், திருச்சி சீதாலட்சுமி, உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளாக பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இம்மாநாட்டில் பெண் தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும், பாதுகாப்பான வேலை இடம் உறுதி செய்ய உள்ளக புகார் குழுவினை அனைத்து பணியிடங்களிலும் அமைத்து கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும், தொழிலாளர்கள் நலத்துறை உள்ளக புகார் குழுவினை நடைமுறைப்படுத்துவதில் பங்கேற்கச் செய்ய தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது,
அனைத்து வகை தொழிலாளர்களையும் தொழிலாளர்களாக அங்கீகரித்து அரசின் அனைத்து தொழிலாளர்கள் சட்ட விதிமுறைகள் மற்றும் சமூக பாதுகாப்புக்கு திட்டங்களுக்கு கிடைக்க செய்ய தமிழக அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *