டிசம்பர் 6 SDPI ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினம்
பாபர் பள்ளி இடித்த 32 ஆண்டுகள் அநீதி அரங்கேறிய தினத்தை முன்னிட்டு SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அசாருதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் Er.I.ஷேக் முகம்மது மற்றும் கிழக்கு தொகுதி தலைவர் I.சபியுல்லா B.com.ஆகியோர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில துணைத்தலைவர் B.அப்துல் ஹமீது அவர்கள் கலந்துக் கொண்டு கண்டன எழுச்சி உரையாற்றினார்.

மேலும், திருச்சி அதாயி அரபிக் கல்லூரி கல்வி குழுமத்தின் தாளாளர் இமாம் R.முஹம்மது ஃபைஜூல் பாரி மற்றும்
விமன் இந்தியா மூவ் மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஆலிமா.M.மெஹராஜ் பானு ஆகியோர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

மாவட்ட பொதுச்செயலாளர் முகமது சித்திக் B.E., அவர்கள் இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி,SDTU மாநில செயலாளர் K.முகம்மது ரபீக்,மாவட்ட செயலாளர்கள் மதர்.Y.ஜமால் முஹம்மது,தளபதி அப்பாஸ்,ஏர்போர்ட்.மஜீத், மாவட்ட பொருளாளர் நியாமத்துல்லா, வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அசாருதீன்,தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்னகர் ரபீக்,Er.N.G.சதாம் உசேன்,A.S.அப்துல் காதர் (பாபு),மாவட்ட ஊடக அணி தலைவர் உபைதுர் ரஹ்மான், தொண்டரணி மாவட்ட தலைவர் ஆரிப், சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் S.S. ரஹ்மத்துல்லா, SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா,மாவட்ட செயலாளர் சர்க்கரை மீரான், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசர்,மணப்பாறை தொகுதி தலைவர் கோயா,திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ஜவஹர் அலி, வடக்கு மாவட்ட செயலாளர் S.B. அலாவுதீன்
வடக்கு மாவட்ட பொருளாளர் தஸ்தகீர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர்கள் சேக் அப்துல்லா,அப்துல் மாலிக்,கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மற்றும் நிர்வாகிகள்,தொகுதி நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள்,பொதுமக்கள், ஜமாத்தார்கள் என பெருந்திரளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *