திருப்பூர் ஐம்பெரும் விழாவில் அமைச்சர்கள்!


அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்த 1969 காலகட்டத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட வகுப்பறைகளுடன் இயங்கும் பெருமைக்குரியது திருப்பூர் மாவட்டம் அய்யன்காளிபாளையத்தில் இருக்கும் வி.கே,அரசு மேல்நிலைப்பள்ளி.
அப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் திறப்பு, நமக்கு நாமே திட்டம், மூலம் புதிய விளையாட்டுத் திடலுக்கு அடிக்கல் நாட்டுதல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. துரைசாமி பெயரில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டுதல், பள்ளி வளர்ச்சிக் குழு நன்கொடையாளர்கள் கவுரவிப்பு, பள்ளியின் 6௦ஆம் ஆண்டு நிறைவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஐம்பெரும் விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் எம்.பி. சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..
உற்சாகத்தோடு திரண்டிருந்த மாணவர்களிடையே பள்ளியின் அனைத்து கட்டமைப்பையும் மேம்படுத்தவும், அவற்றை மாணவர்கள் முறையாக பயன்படுத்தவும் நம் முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ள திட்டங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்கள்.

செய்தியாளர் : பிரசன்னன் – தலைமை செய்தியாளர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-

    மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… கழகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்…

    அடுத்த தேர்தலை மனதில் வைத்து ஆட்சி நடத்துவதை காட்டிலும் அடுத்த தலைமுறை மனதில் வைத்து ஆட்சி நடத்தக்கூடியவர் தான் நமது தமிழக முதல்வர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி

    திருச்சி கிழக்குத் தொகுதியில்தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம். திருச்சி இ.பி. ரோட்டில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்குத் தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்பரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. வரவேற்புரை மாநகரக் கழகச் செயலாளர்மு.மதிவாணன் தலைமை ஏற்று சிறப்புரை திருச்சி தெற்கு மாவட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *