திருப்பூர் ஐம்பெரும் விழாவில் அமைச்சர்கள்!


அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்த 1969 காலகட்டத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட வகுப்பறைகளுடன் இயங்கும் பெருமைக்குரியது திருப்பூர் மாவட்டம் அய்யன்காளிபாளையத்தில் இருக்கும் வி.கே,அரசு மேல்நிலைப்பள்ளி.
அப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் திறப்பு, நமக்கு நாமே திட்டம், மூலம் புதிய விளையாட்டுத் திடலுக்கு அடிக்கல் நாட்டுதல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. துரைசாமி பெயரில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டுதல், பள்ளி வளர்ச்சிக் குழு நன்கொடையாளர்கள் கவுரவிப்பு, பள்ளியின் 6௦ஆம் ஆண்டு நிறைவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஐம்பெரும் விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் எம்.பி. சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..
உற்சாகத்தோடு திரண்டிருந்த மாணவர்களிடையே பள்ளியின் அனைத்து கட்டமைப்பையும் மேம்படுத்தவும், அவற்றை மாணவர்கள் முறையாக பயன்படுத்தவும் நம் முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ள திட்டங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்கள்.

செய்தியாளர் : பிரசன்னன் – தலைமை செய்தியாளர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *