புதுச்சேரியில் கர்மயோகி பாரத் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று (06-12-2024) நடைபெற்றது. மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு. K. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாண்புமிகு முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு R. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திரு அசோக் பாபு, தலைமைச் செயலர் திரு சரத் சௌகான், அரசு செயலர் திரு பங்கஜ் குமார் ஜா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பயிற்சி முகாம் நடைபெற்றது. அரசு உயரதிகாரிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் புசி ஆனந்த் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28ஆவது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா திறந்து வைத்தார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *