திருப்பூரில் படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமார் இல்லத்தில் அண்ணாமலை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், கடந்த 28-ஆம் தேதி அன்று, மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சகோதரர் செந்தில் குமார் அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவரின் மனைவி, சகோதரி கவிதா மற்றும் அவரது குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை

தாய், தந்தை, மகன் என ஒரே நாளில், எந்தத் தவறும் செய்யாத மூன்று பேரை தங்கள் குடும்பத்தில் இழந்த சகோதரி கவிதா மற்றும் அவர் குழந்தைகளின் துயரத்திற்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. சகோதரி கவிதா, குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து, சட்டத்தின்படி தகுந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சகோதரி கவிதா அவர்கள் குடும்பத்தினருக்கு, விரைவாக நியாயம் பெற்றுத் தருவோம் என்று உறுதி அளித்தோம்.

குற்றம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழகக் காவல்துறை, 14 தனிப்படைகள் அமைத்தும் குற்றவாளிகள் பற்றிய எந்த விவரமும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழகக் காவல்துறையினரின் திறமை மீது எந்த ஐயமும் இல்லை. ஆனால், தமிழகக் காவல்துறையினருக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகளோ, தொழில்நுட்ப வசதி குறைபாடுகளோ, வழக்கு விசாரணை முன்னேற்றத்தில் தாமதத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது.

வழக்கு விசாரணை தாமதமாவதால், இந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஏற்படும் ஒவ்வொரு நாள் காலதாமதமும், குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு அளிப்பதாக இருக்கிறது. எனவே, இனியும் காலதாமதமின்றி, வழக்கு விசாரணையை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாகக் கோரிக்கை வைக்கவிருக்கிறோம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *