தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49-லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49-லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சடைய பாளையம் மற்றும் சூரியநல்லூர், ஆகிய ஊராட்சிகளில் ரூ.49-லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் – தொடங்க உள்ள புதிய பணிகள் ஆகியவற்றை மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

இதில்
திமுக தெற்கு மாவட்ட செயலாளர்இல. பத்மநாபன், குண்டடம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், சடையபாளையம் ஊராட்சி தலைவர் ஈஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி கூறியதாவது:-

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 10.00 இலட்சம் மதிப்பில் ஈஸ்வரசெட்டிபாளையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை திறந்து வைத்தும்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி2023- 2024-2025 திட்டம் மூலம் ரூ. 10.00 இலட்சம் மதிப்பில் பேட்டைகாளிபாளையத்தில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி மற்றும் ரூ. 10.00 இலட்சம் மதிப்பில் மானூர்பாளையத்தில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியையும்
ரூ. 8.25 இலட்சம் மதிப்பில் சடையபாளையம் புதூரில் புதியதாக கட்டப்பட்ட 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும் ரூ. 10.00 இலட்சம் மதிப்பில் வேங்கிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை அமைக்கும் பணியை துவங்கி வைத்தும் –
திறந்தும் வைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியின் போது திமுகவினர்,ஊர் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *