திருச்சி பொன்மலை ரயில்வே பொறியாளர் டி.எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ரயில்வே அமைச்சர் விருது

திருச்சி பொன்மலை ரயில்வே பொறியாளர் டி.எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ரயில்வே அமைச்சர் விருது

இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கியதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது.

நாட்டின் 69-ஆவது ரயில்வே வாரவிழாவை முன்னிட்டு ரயில்வே துறையில் சிறந்து விளங்கும் பணியாளர்களை பாராட்டுவகையில் ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ என்றும் விருது வழங்கப்படும்.

இதில் தெற்கு ரயில்வே – யில் இருந்து 8 பணியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு டிச.21- ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறவுள்ள நிகழ்வில் ரயில்வே அமைச்சர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

உற்பத்தித் திறனை மேம்படுத்த பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகயும், செயல் திறனை மேம்படுத்தி செலவுகளை குறைத்தமைக்காகயும், பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் மூத்த பொறியாளர் டி.எம்.கோபால கிருஷ்ணன் அவருக்கு இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விருது வழங்கப்பட்டது.

டி.எம்.கோபாலகிருஷ்ணர் அவரை 22.12.24 காலை 10.00 திருச்சி ரயில்வே நிலையத்தில் மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், ரயில்வே சீனியர் பொறியாளர் மோகன்தாஸ், சீனிவாசன்,
சிந்தாமணி,
சஹானா பிரியதர்ஷினி,
அபிஷேக் ராகவ்,
காவ்யா பிரியதர்ஷினி,
மோகன்,
உதயா மற்றும் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினார்கள் பொன்னாடை போர்த்தி,நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *