கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாத தரிசனம்…..

கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாத தரிசனம்…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணைக் கோவிலும் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற ஸ்தலமான சக்கராப்பள்ளி தேவநாயகி அம்மாள் சமேத சக்கரவாகேஸ்வரர் திருக்கோயிலுக்கு
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனுர்‌மாத தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தேவநாயகி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனையும், மூலபிரகான சக்கராவரேஸ்வர் மற்றும் ஏனைய பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சூலமங்கலம் கீர்த்திவாகேஸ்வரர், பசுபதி கோவில் புள்ளமங்கை உள்ளிட்ட திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.
இதில் திரளான பக்தர்கள் கிராம மக்கள் திருக்கயிலை சிவ பூத கணத் திருக்கூட்டம் சிவனடியார்கள் மீட்டர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தமிழக கவர்னர் RN. ரவி திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் கோவில்களில் சுவாமி தரிசனம்.

    ஸ்ரீரங்கம் ஜன 29 தமிழக கவர்னர் ஆர் என் ரவி நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 10:15 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள்…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *