தவெக தலைவர் விஜய் அறிக்கை வினியோகம் செய்த மகளிர் அணியினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டார்.

அதன் விபரம் பின் வருமாறு:-

கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் தங்கைகள் பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள் பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு மன அழுத்தத்திற்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளேன். நீங்கள் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் எந்த சூழ்நிலையிலும் இருக்க வேண்டும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்

இந்த அறிக்கையை தமிழகம் முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் துண்டு பிரசுரமாக அளித்து வருகின்றனர்.

சென்னையில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். காவல்துறை அனுமதி இன்றி பொது இடத்தில் கூடியதாக கூறி புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் திருச்சி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் அணியினர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களுக்கு அளித்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *