திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 4 ஆண்டுகளில் மக்களை முன்னிலைப்படுத்தியே ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன – அமைச்சர் அன்பில் மகேஸ்

திருவெறும்பூா் தொகுதியில் ரூ. 3.85 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட திருவளா்ச்சிப்பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம், அய்யன்புதூா் கிராமத்தில் நெசவாளா் காலனிக்கு 2 கி.மீ. புதிய தாா்ச்சாலை, சூரியூரில் புதிய துணை சுகாதார நிலையம், சோழமாதேவியில் சமுதாயக் கூடம், நவல்பட்டு ஊராட்சியில் உய்யக்கொண்டான் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் என ரூ. 3.85 கோடியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 4 ஆண்டுகளில் மக்களை முன்னிலைப்படுத்தியே ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதேபோல, மக்களின் தேவைகளை அறிந்து தொகுதிக்கான அனைத்துப் பணிகளும் நிறைவேற்றித்தரப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, திருவெறும்பூா் ஒன்றிய குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவா்கள் லட்சுமி திருமுருகன், சண்முகசுந்தரம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *